புதுக் கவிதை

மண் வாசனை

1.

வளங்கள் பொங்குமா கடலிடை நிமிர்ந்து சிரிக்கிற நம்மட முத்து..

கமுகும், தெங்கும், ரப்பர், தேயிலை, மலையும், பள்ளத்தாக்கும்,

வான் முட்ட மரங்களும்,

 » Read more about: மண் வாசனை  »

புதுக் கவிதை

தேவதை

இந்த பூமிக்கு
இரண்டே இரண்டு
தேவதைகள்தான் …
இன்று நீ
நாளை நம் மகள் …

உன் வீட்டின்
வாசலிலிருந்துதான்
தொடங்குகிறது
என் உலகம் …

 » Read more about: தேவதை  »

புதுக் கவிதை

” மண் வாசனை”

கரும்பு கொல்லைக்குள்ளே..
கட்டை வெதைக்கையிலே..
ஏங்கண்ணுக்குள்ள.. ஓங்கண்ண..
வெச்சு புதைச்சுப் புட்ட..

மொளைச்சி வார புல்லு போல..
மனசுக்குள்ள துளுத்து வளந்துபுட்ட..
மண்ணணைச்சு வெக்கறப்போ
மனசணைச்சி நின்னுகிட்ட..

 » Read more about: ” மண் வாசனை”  »

புதுக் கவிதை

எனக்குப் பிடித்த தனிமையுடன்….

வெகுநேரம் மௌனத்துடன்
பேசிக் கொண்டே இருக்கின்றேன்
எனக்குள்ளே தொலைந்து தொலைந்து
என்னையே நான் தேடுகிறேன்

எனக்குள்ளே வினாக்கள் தொடுத்து
இதமான விடையை எழுதுகிறேன்
மனக் கணக்கு போட்டு போட்டு
சாதக விடியலைக் காண்கின்றேன்

கண்களுக்குள்ளே கனவுகள் பதித்து
கவிதைகள் நூறு படைக்கின்றேன்
கதைகளுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கி
கதாப்பாத்திரங்களுடன் உறவாடுகின்றேன்

கடந்துபோன ஞாபகங்களை
இதய ஏட்டில் புரட்டுகிறேன்
காயப்பட்ட நிகழ்வுகளுக்கு
மறதியை மருந்தாய் பூசுகிறேன்

மாய உலகில் சஞ்சரித்து
மறுமையைக் காணத் துடிக்கின்றேன்
ஆருயிரான ஆன்மாக்களுடன்
அளவளாவி மகிழ்கிறேன்

ஆத்திரத்தில் உதிர்த்த வார்த்தைகளை
சொல்லாட்சியில் அழிக்கின்றேன்
அறியாது செய்தப் பிழைகளுக்கு
மனசாட்சியிடம் மண்டியிடுகின்றேன்

எனக்குப் பிடித்த ஏகாந்தத் தனிமை
என்றும் என்றும் என்னுடனே
பிணக்குக் கொண்டுப் பிரிந்தாலும்
திணித்து எனக்குள் வாழ்ந்திடுவேன்!

 » Read more about: எனக்குப் பிடித்த தனிமையுடன்….  »

புதுக் கவிதை

பூமியின் ஜாதகம்

பூமிக்குப் போதாத காலம்!
ஒன்றும் புரியாமல்
அமர்ந்திருந்த
என்னிடம் வந்து..!
பூமி தன் உள்ளங்கையைக்
காண்பித்தது..!

நேரம் நன்றாக இல்லையாம்  –  நான்
கைரேகை பார்த்து
பலன் சொல்ல வேண்டுமாம்..!

 » Read more about: பூமியின் ஜாதகம்  »

புதுக் கவிதை

கன்னியின் கண்ணீர் 

காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா?

தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா?

 » Read more about: கன்னியின் கண்ணீர்   »

புதுக் கவிதை

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

 » Read more about: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது  »

புதுக் கவிதை

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..!

சிவந்த வானமாய் அவன் கண்கள் ..!
சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..!

 » Read more about: அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!  »

புதுக் கவிதை

உறவுகள்

பாரிய மரத்தின் படர்ந்து நின்ற விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

மலர்ந்து பூப்பூவாய் கண்மலர்
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

 » Read more about: உறவுகள்  »

புதுக் கவிதை

பெண்ணியம் போற்று

படைத்தான் உன்னை கடவுள்
கிரங்க வைத்தாய் என்னை!

உன்னை
உரசிக்கொண்டு
வந்திருக்க வேண்டும்
மென்மையானது காற்று
ஜன்னல் ஓரத்தில்.

ஆழம்தான் உன்னின்
தெரியவில்லை!

 » Read more about: பெண்ணியம் போற்று  »