மண் வாசனை

1. வளங்கள் பொங்குமா கடலிடை நிமிர்ந்து சிரிக்கிற நம்மட முத்து.. கமுகும், தெங்கும், ரப்பர், தேயிலை, மலையும், பள்ளத்தாக்கும், வான் முட்ட மரங்களும், காட்டாற்று வனப்பும், மணம் பரப்பும் சோலைகளும் நிறைந்ததெங்கட மண்ணு.. கோட்டைக்கொத்தளமுமகழியும், நீர்த்தேக்கங்கள் நிறைஞ்சு மிளிரும், ஓவியம் சிற்பங்களோட கொஞ்சிடுமழகு மனமுமயக்கிடும் கண்ணு.. 2. உயிரோட ஒறவாடும் மண்ணு மணத்த களவாட வந்து குதிச்சதந்த வெடிமருந்து வீச்சம், பெருஞ் சத்தத்தோட பொகைய ஊதி விடும் துப்பாக்கி சொண்டுகளும், Read more

தேவதை

இந்த பூமிக்கு இரண்டே இரண்டு தேவதைகள்தான் … இன்று நீ நாளை நம் மகள் … உன் வீட்டின் வாசலிலிருந்துதான் தொடங்குகிறது என் உலகம் … நீ எங்கெல்லாம் கூழாங்கற்களை அள்ளி வீசுகிறாயோ அங்கெல்லாம் சலசலத்து ஓடத் தொடங்கும் நீரோடை … வணங்கச் செல்லுமுன் தெப்பக்குளத்தில் கால் நனைக்கிறாய் … கரையில் இருப்பவர்களிடம் விரைந்தோடி உன் அழகை தமுக்கடிக்கின்றன நீரலைகள் … கோவிலுக்கு நீ வரும் அழகை பார்ப்பதற்காகத்தான் கோபுரத்தின் Read more

” மண் வாசனை”

கரும்பு கொல்லைக்குள்ளே.. கட்டை வெதைக்கையிலே.. ஏங்கண்ணுக்குள்ள.. ஓங்கண்ண.. வெச்சு புதைச்சுப் புட்ட.. மொளைச்சி வார புல்லு போல.. மனசுக்குள்ள துளுத்து வளந்துபுட்ட.. மண்ணணைச்சு வெக்கறப்போ மனசணைச்சி நின்னுகிட்ட.. ஒரந்தூவி வாரயிலே.. ஒன்னத் தூவி வெச்சிப்புட்ட.. தண்ணி பாய்ச்சுறாப்போல ஒன் பார்வைப் பாய்ச்சினியே.. கரும்பு வளர்ராப்போல.. மளமளன்னு காதல் வளந்துடுச்சே.. பனியாலே செங்கரும்பு திதிப்பேறி போனாப்போல.. ஒன் நெனப்பால திதிப்பாயி மனசு இனிச்சிருச்சு.. பூவரசும் பூத்திடுச்சு.. அரசாணிப்பூ பூத்த கோலமா கொலுவிருக்கு.. Read more

எனக்குப் பிடித்த தனிமையுடன்….

வெகுநேரம் மௌனத்துடன் பேசிக் கொண்டே இருக்கின்றேன் எனக்குள்ளே தொலைந்து தொலைந்து என்னையே நான் தேடுகிறேன் எனக்குள்ளே வினாக்கள் தொடுத்து இதமான விடையை எழுதுகிறேன் மனக் கணக்கு போட்டு போட்டு சாதக விடியலைக் காண்கின்றேன் கண்களுக்குள்ளே கனவுகள் பதித்து கவிதைகள் நூறு படைக்கின்றேன் கதைகளுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கி கதாப்பாத்திரங்களுடன் உறவாடுகின்றேன் கடந்துபோன ஞாபகங்களை இதய ஏட்டில் புரட்டுகிறேன் காயப்பட்ட நிகழ்வுகளுக்கு மறதியை மருந்தாய் பூசுகிறேன் மாய உலகில் சஞ்சரித்து மறுமையைக் காணத் Read more

பூமியின் ஜாதகம்

பூமிக்குப் போதாத காலம்! ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்த என்னிடம் வந்து..! பூமி தன் உள்ளங்கையைக் காண்பித்தது..! நேரம் நன்றாக இல்லையாம்  –  நான் கைரேகை பார்த்து பலன் சொல்ல வேண்டுமாம்..! பூமி பாவமென்றுக் கருதி உள்ளங்கையைப் பிடித்துப் பார்த்தேன்..! பூமத்திய ரேகை உத்தமம்..! அட்ச ரேகை பட்சமாய் இருக்கிறது..! தீர்க்க ரேகையினால் ரோகமில்லை..! ஆ….. இதென்ன..! பூமிக்கு ஆயுள் ரேகையைக் காணவில்லை..! ஆமாம்..! ஆயுதம் பிடித்து ஆயுதம் பிடித்து பூமிக்கு Read more

கன்னியின் கண்ணீர் 

காலம் கனியுமா கனவுகள் பலிக்குமா கவலைகள் கலையுமா கன்னி மனம் மகிழுமா? தண்ணீரில் மீன் அழுதால் தெரியுமா கண்ணீரில் போடும் கோலம் நிலைக்குமா? ஊமைக்குயில்பாடும் ராகம் புரியுமா ஏழை எனக்கொரு வாழ வழி பிறக்குமா? மனம் மதிக்கும் மனமொன்று கிடைக்குமா மணமாலையொன்று வந்து கழுத்தில் விழுமா ? என் இளமை வீணாகியே போகுமா வயதாகி வாழாது வாழ்வு பாழா போகுமா ?

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை Read more

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..! சிவந்த வானமாய் அவன் கண்கள் ..! சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..! தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..! நிலம் கேட்டு கண்முன்னே காணி பராசக்தியிடம் கோபம் தொடுத்தவன் ..! காதல் கசிய விரல்களை வீணையாக்கியவன் ..! எதிர்த்தடித்து ஏற்றறத்தாழ்வுகளை இம்மண்ணில் சமம் நிலவ கலகம் பூண்டவன் ..! காண்போர் கனவு மெய்பட வேண்டுமென குரல் எழுப்பியவன் ..! Read more

உறவுகள்

பாரிய மரத்தின் படர்ந்து நின்ற விழுதுகள் நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை! மலர்ந்து பூப்பூவாய் கண்மலர் புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து! விழுதினில் ஒன்று உறுதியாய் நின்ற புது விதையை பார்த்தது, சிரித்தது முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக நான் உன் மாமனடா என்றது! புன்னகை Read more

பெண்ணியம் போற்று

படைத்தான் உன்னை கடவுள் கிரங்க வைத்தாய் என்னை! உன்னை உரசிக்கொண்டு வந்திருக்க வேண்டும் மென்மையானது காற்று ஜன்னல் ஓரத்தில். ஆழம்தான் உன்னின் தெரியவில்லை! இன்னும் … அளந்துக் கொண்டிருக்கிறேன்! என்னன்பு என்றும் பெண்ணியம் போற்றும்! போற்ற பெண்னியம் என்னின்பம் தழைக்கும்!