பூமிக்குப் போதாத காலம்!
ஒன்றும் புரியாமல்
அமர்ந்திருந்த
என்னிடம் வந்து..!
பூமி தன் உள்ளங்கையைக்
காண்பித்தது..!
நேரம் நன்றாக இல்லையாம் – நான்
கைரேகை பார்த்து
பலன் சொல்ல வேண்டுமாம்..!
பூமி பாவமென்றுக் கருதி
உள்ளங்கையைப்
பிடித்துப் பார்த்தேன்..!
பூமத்திய ரேகை உத்தமம்..!
அட்ச ரேகை பட்சமாய்
இருக்கிறது..!
தீர்க்க ரேகையினால்
ரோகமில்லை..!
ஆ….. இதென்ன..!
பூமிக்கு ஆயுள் ரேகையைக் காணவில்லை..!
ஆமாம்..!
ஆயுதம் பிடித்து
ஆயுதம் பிடித்து
பூமிக்கு அழிந்திருக்கிறது
ஆயுள் ரேகை..!
வாருங்கள்..!
வாருங்கள்..!
இந்த பூமியின் ஆயுதம்
முழுவதையும் உருக்கி எடுப்போம்..!
இப்பூமிக்குப் புதிதாய்
ஆயுள் ரேகை ஒன்றை
அமைத்துக் கொடுப்போம்..!!
1 Comment
சா.சையத் முகமது · டிசம்பர் 30, 2016 at 15 h 46 min
அருமையான கவிதை… தோழமையே…
பெருமையாக இணைத்ததற்கும் மகிழ்ச்சியே…
திறமைதனை ஊக்குவிக்கும் உங்கள் திறமையே
நிரந்தரமாய் பயணிக்க ஆசை யதிகமானதே!