என் வீட்டு இளவரசி

உன்னோடு கொஞ்சி
துள்ளி விளையாடவே
விண்மீன்கள் ரெண்டும்
ஓடி வந்து உந்தன்
விழிகளுக்குள் ஒளிந்ததோ !
வெள்ளி நிலவே
உன்ன தாலாட்டவே
வானவில் அந்தரத்தில்
ஊஞ்சல் கட்டி தொங்குதோ !

எம்மனசு !

வாடுது வாடுது எம்மனசு இங்கே உன்னை நினைத்து வாடுது … தேடுது தேடுது எந்தன் விழிகள் கனவில் உன்ன தேடுது … ஆடுது ஆடுது காதலை சொல்லி மனசு கூத்தாடுது … கூடுது கூடுது வான் மேகங்கள் பூ மழை தூவ கூடுது … நாடுது நாடுது மழைத் துளியில் சேர்ந்து நனைந்திட … உந்தன் வரவை என்னுள்ளம் நாடுது … பாடுது பாடுது என்னை தேடி நீ வந்ததுமே Read more

தமிழை என்னுயிர் என்பேன்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

சங்கே முழங்கு

தேனாய்  சுவையாய் திகட்டாத — கனியாய் கண்ணாய்  கனியமுதாய் மானாய்  மயிலாய் மரகதமாய் — மலராய் மணியாய் மாம்பூவாய். வானாய்  வளியாய் வயல்வெளியாய். — வழியாய் ஒளியாய் ஒலியினிலே. எங்கும் என்றும் எத்திக்கும் — எல்லாம் தமிழின்  உயர்வாகும். ஓங்கும்  தாங்கும்  மனதினிலே — உருவாய் கருவாய்  கவியினிலே. பொங்கும் பொழியும் புவிதனிலே — சங்கே  முழங்கு  சபைதனிலே. சொல்லும்  சுவையும் இனித்திடவே — சுடராய் இருளை நீக்கிடவே கல்லும் மண்ணும் Read more