PicsArt_1419573449514தேனாய்  சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய்  கனியமுதாய்
மானாய்  மயிலாய் மரகதமாய்
மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய்  வளியாய் வயல்வெளியாய்.
வழியாய் ஒளியாய் ஒலியினிலே.

எங்கும் என்றும் எத்திக்கும்
எல்லாம் தமிழின்  உயர்வாகும்.
ஓங்கும்  தாங்கும்  மனதினிலே
உருவாய் கருவாய்  கவியினிலே.
பொங்கும் பொழியும் புவிதனிலே
சங்கே  முழங்கு  சபைதனிலே.

சொல்லும்  சுவையும் இனித்திடவே
சுடராய் இருளை நீக்கிடவே
கல்லும் மண்ணும் தோன்றிடுமுன்
கவியில்  தந்தான் இலக்கணமே.
வெல்லும்  மொழிதான் எம்மொழியே
சங்கே முழங்கு  கவியினிலே.

அறுசீர்  விருத்தம். மா – மா – காய்.