PicsArt_1419573449514தேனாய்  சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய்  கனியமுதாய்
மானாய்  மயிலாய் மரகதமாய்
மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய்  வளியாய் வயல்வெளியாய்.
வழியாய் ஒளியாய் ஒலியினிலே.

எங்கும் என்றும் எத்திக்கும்
எல்லாம் தமிழின்  உயர்வாகும்.
ஓங்கும்  தாங்கும்  மனதினிலே
உருவாய் கருவாய்  கவியினிலே.
பொங்கும் பொழியும் புவிதனிலே
சங்கே  முழங்கு  சபைதனிலே.

சொல்லும்  சுவையும் இனித்திடவே
சுடராய் இருளை நீக்கிடவே
கல்லும் மண்ணும் தோன்றிடுமுன்
கவியில்  தந்தான் இலக்கணமே.
வெல்லும்  மொழிதான் எம்மொழியே
சங்கே முழங்கு  கவியினிலே.

அறுசீர்  விருத்தம். மா – மா – காய்.

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.