உலகம் மாறிப் போச்சு!

குளமுமே வத்திப் போச்சு குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப நிலமுமே காஞ்சு போச்சு நிலத்தடி நீரு மில்ல! விளச்சலும் குறைஞ்சு போச்சு விளைநிலம் வீடா ஆச்சு – நல்ல மழையுமே பெய்ய வில்ல மனசுமே உடைஞ்சு போச்சு! நீரோடும் ஆறு மிங்கே நீரின்றி வறண்டு போச்சு – செழித்த ஏரோடும் நிலத்தக் காணோம் எல்லாமே மாறிப் போச்சு! மரத்தயும் வெட்டி யாச்சு மண்வளம் கெட்டுப் போச்சு! – செயற்க Read more

விழியாலே கதைசொல்லும்

பேச்சில் இனிமை வேண்டும் !

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில் …… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் ! தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித் …… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ ! ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும் …… உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் ! ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல் …… ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே ! கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு …… கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு ! உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் ! Read more

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 

காற்றாய் என்னுள் வந்து போகிறாய்  காதல் கவிதைகள் தந்து போகிறாய்  நேற்றோடிந்த உறவு முடிந்ததா நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! … கொட்டும் மழையில் நியிருக்கக் குடைகள் வேண்டுமா நண்பனே ?… ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க  உயிரைக் கொடுக்க வந்த நண்பனே … வறுமை போனது வசதியும் வந்தது அதுவும் உன்னாலே இன்று பொறுமை இழந்து – பொங்கி எழுகிறேன் அதுவும் உன்னாலே பழகித் திரிந்த காலம் உனக்கு Read more

நதியின் குரல்

இயற்கை எழுதிய தண்ணீர்க் கவிதை நான். மண்ணின் மனக்குரலின் திரவப் பதிவு . . ! புவிக்கோளத்தின் புதுமை யுகங்களைக் கடந்து நிற்கும் அகிலத்தின் ஆயுள் ரேகை. வெளியில் மிதக்கும் வெளிச்சப் புதையல். எழுந்திடத் துடிக்கும் என் அலைகள், குளிர் ஜுவாலைகள். உயிர்களைப் பிரசவித்திட மண் மங்கை கருவுற்ற போது நான் உயிரணுக்களுக்காக ஊறிவந்த தாய்ப்பால். நான் பிரபஞ்ச மொழியில் பேசியதெல்லாம் புரியாமல் போனதால் உங்கள் உள்ளூர் மொழியில் உரைத்திட Read more

புரட்சி வெடிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் – நம்
உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்!
வளமாய் நாட்டை மாற்றிடவே – ஒரு
வண்ணத் தமிழன் ஆளட்டும்!

விடையும் காண விரையட்டும் – நல்
வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்!
குடியால் வீழ்ந்து கிடப்போரும் – தமிழ்க்
குடியைக் காக்க விழிக்கட்டும்!

கம்பன் புகழைப் பாடு மனமே !

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! – தேயவழி
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து!

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும்
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! – அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு!

நான் ஆட்சிக்கு வந்தால் …

புட்டிக்குள் இருக்கும் மதுவைப்
பருகிடும் செயலைக் கொய்வேன்.

கடவுள் பெயரால் நடக்கும்
கொடுமைகள் பலவும் தடுப்பேன்.
மடமை போற்றும் துறவிகள்
மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் .

இலஞ்சம் ஊழல் இல்லாத
இலட்சிய ஆட்சிப் புரிவேன்.