ஆண்டான் அடிமை ஒழிய
அத்தனை நன்மையும் புரிவேன் ,
தீண்டாமை அறவே நீங்க
திருத்தங்கள் பலவும் செய்வேன்.

அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி
அநியாயம் செய்வோரைத் தடுப்பேன் .
படித்த கல்விக்கு ஏற்ற
பணியினை நானும் கொடுப்பேன்.

வட்டிக்கு விடுவோர் தம்மை
வருந்தி உழைத்திடச் செய்வேன்.
புட்டிக்குள்  இருக்கும் மதுவைப்
பருகிடும் செயலைக் கொய்வேன்.

கடவுள் பெயரால் நடக்கும்
கொடுமைகள் பலவும் தடுப்பேன்.
மடமை போற்றும் துறவிகள்
மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் .

இலஞ்சம் ஊழல் இல்லாத
இலட்சிய ஆட்சிப் புரிவேன் ,
பஞ்சம் பட்டினி வாராமல்
பசிக்கு உணவை அறிவேன்.

மக்கள் வாழ்ந்திட ஆட்சியை
மனதில் நினைத்து ஆளுவேன் .
தக்க படிநான் இராவிடில்
தண்டனை தந்தே மாளுவேன் .


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.