காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 
காதல் கவிதைகள் தந்து போகிறாய் 
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…
ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க 
உயிரைக் கொடுக்க வந்த நண்பனே …

வறுமை போனது
வசதியும் வந்தது அதுவும் உன்னாலே
இன்று பொறுமை இழந்து – பொங்கி
எழுகிறேன் அதுவும் உன்னாலே

பழகித் திரிந்த காலம் உனக்கு
நினைவில் இல்லையா ?…
இரு பக்கம் கொண்ட கடிதம் எழுத
வெக்கம் இல்லையா ?…

உயிரைப் பிசையும் வார்த்தை ஜாலம்
உனக்குள் ஏதடா ?…
உணர்வைக் கொன்று பகையை வளர்க்கும்
உயிர் நண்பா சொல்லடா ?…

எருமைத் தலையன் பேச்சுக்கே தான்
தலையை ஆட்டுறாய் …
ஏனோ இந்த மாற்றம் தந்து
மனதை வாட்டுறாய் …

துயரக் கடலில் கப்பல் ஓட்டி
எங்கே செல்வேன் நான் ?…
துடுப்பாய் இருந்த நண்பன் இன்றித்
துலைந்தே போவேன் நான் …

மரணம் வந்து சேரும் முன்னால்
மனசை மாற்றடா …
என்  உலகம்  நீதானடா – அதை
என்றும் மறவேன் நான் தானடா …

நண்பா நண்பா நண்பா  -எங்கள்
நட்பைப் பாரடா …
அன்பாய்த் திரிந்த காலம் அழுகுது
அதையேனும் கேளடா …

சொல்லும் வரைக்கும் சொல்லிப்புட்டேன் 
சோகம் தானடா… 
எனைக் கொஞ்சம் அள்ளும் வரைக்கும்
அள்ளிக் கொள்ள வா ஆசை நண்பனே …


1 Comment

நினைவெல்லாம் நீதானே · ஏப்ரல் 5, 2016 at 15 h 10 min

அருமை கவிஞரே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.