குதிரையாளி

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை: ●●● குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு. குதிரையைப் போன்று கடிவாளம்கொண்டு வீரன் ஒருவன் அமர்ந்திருப்பதால் அது குதிரையாளி என்று அழைக்கப் பட்டிருக்கலாம். குதிரையாளி யானையை தன் பலத்தால் தாக்கிக் கொல்லும் காட்சி கண்டு பராக்கிரம பலம் கொண்ட புலியே நடுங்கும் என்பர். இது கற்பனை விலங்கு. எனவே இதைத் Read more

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன், பாலமுனைப் பாறூக் என்ற மூத்த மேதைகளின் நடையில் அமைந்தது. ஈழத்தின் குறும்பா, உலகுக்கு ஒரு முன் மாதிரி. அதை தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள வாசகர்கள் அறிவார்கள் . பாவேந்தல் பாறூக் சேர் Read more

உன் முகமாய் இரு

உன் முகமாய் இரு. மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு. மதுரை வந்திருந்த போது நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது. பேசி மகிழ்ந்தோம். பெயரிலேயே தமிழ் இருப்பதால் தமிழ் உணர்வோடு இருக்கிறார். கொண்ட கொள்கையில் மரபு மட்டும் எழுதுவது என்பதில் மிகவும் உறுதியாக Read more

பாலமுனை பாறூக் குறும்பாக்கள்

ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார். அடுத்தடுத்து வெளிவந்த அவரது குறுங்காவியங்கள்தாம் அந்த ஈர்ப்புக்குக் காரணம் கொந்தளிப்பு (2010), தோட்டுப்பாய்மூத்தம்மா (2011), எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு (2011) ஆகிய மூன்று குறூங்காவியங்களை வசன கவிதையில் புதிய பொருண்மைகளைக் கருக்கொண்டு விறுவிறுப்பான வீச்சுடன் படைத்து Read more

வீழாதே தோழா

புத்தக மதிப்புரை நூலின் பெயர் : வீழாதே தோழா பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள் நூலாசிரியர் : மனோபாரதி, manobharathigr@gmail.com www.facebook.com/manobharathigr கைப்பேசி : +91 8903476567   என் உயிர்க்கினிய தம்பி மனோபாரதி, துடித்தெழும் புலியாக வெடித்தெழும் நெருப்பாக கருத்து வித்துகளை விதைத்திருக்கிறான்! இது முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்! எதுகை மோனை ஏர்பூட்டி நடக்க, நன்செய் வயலில் நாற்று நடமாடுவதாய் வளமான கவிதைகளைப் படைத்திருக்கிறான்! தடைகளைத் Read more

காட்டு நெறிஞ்சி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி. முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”. கவிதை என்றாலே காதலைப் புறம் தள்ளிவிட்டு எழுதிவிட முடியாது. காரணம் காதல்தான் அவனின் முதல் கவிதை. எங்குப் பார்த்தாலும் எழுதிவிட்டுத்தான் செல்கிறேன் என்னோடு Read more

மீண்டும் பூக்கும்

“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்” , சல்மாவின் “மூன்றாம் ஜாமங்களின் கதை” நான் வாசித்து முடித்த இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் என்பது நினைவு!? பொதுவாக புத்தகம் வாசிப்பது என்பது இப்போது மின்மீடியாக்கள் ஆக்ரமிப்பில் எனக்கும் குறைந்தே Read more

முக்கோண முக்குளிப்பு

“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம். அப்படியே தந்தாலும் நினைவுபடுத்தி பெற்றுக் கொள்வோம். ஒரு நூலுக்கான மதிப்பை அதை படிக்கும் ஓரிரு பக்கங்களிலேயே தீர்மானித்து விடலாம். மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் புத்தங்கள் உலத்தின் தலைச் சிறந்த மதிப்பைப் பெற்றதாகும். படிக்க Read more

மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு

இராஜகவி ராகில் எழுதிய முதல் நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘ தலைப்பே பெரும் இனிப்பு . முதலில், பேரா. துரை மனோகரன் அவர்களின் அணிந்துரை நாவலுக்கு மகுடம் சூட்டுகின்றது . “இந்நூலில்தமிழ்ப் பாத்திரங்களும் முஸ்லீம் பாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இப்பாத்திரங்கள் இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி ஒருவருக்கு ஒருவர் உதவி அவர்கள் வாழ்வதை நாவலாசிரியர் நாவலில் அழகாகக் Read more

மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்

கவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது. கவிதையை எழுதுபவர் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெற வேண்டும் என்று எண்ணிச் சில உத்தியைக் கையாண்டு கவிதைப் படைப்பர். அந்த யுக்தி முறைகளால் கவிஞரின் உணர்ச்சியை அதில் பதிய வைக்கப்படுகிறது. கற்பனை, சொற்களின் Read more