ஹைக்கூ திண்ணை 7

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும்.

அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி

‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

திருப்பூரைச் சேர்ந்த மலையேறும் மகளிர்

மின்னிதழ் / நேர்காணல் செல்வி திருப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். தற்பொழுது பிரிட்டனில் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அவருடைய வேலை நேரம் போக மீதி நேரங்களில் தொலைதூரம் நடப்பது, தொடர்ந்த விடுமுறைகளில் ரிஸ்க் எடுத்து மலையேறுவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். வாழ்வின் வசந்தத்தை, வெப்பத்தை ஒருசேர பார்க்கும் அனுபவிக்கும் தருணங்கள் இவை என அழகாகச் சொல்கிறார். அவரின் நேர்காணலில் நீங்களும் அதை உணரலாம். நேர்கண்டவர் : ]முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி ஆகஸ்ட் Read more

புதிய பாடலாசிரியர் சேனையூர் சப்றீன்

மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் சேனையூர் சப்றீன் நீங்கள் உங் களைப் பற்றிய அறிமுகத்தை எங்களது வாசகர்கள் நெஞ்சத்தை தொட்டே இனிதே ஆரம்பியுங்களேன்? எனது பெயர் சஹாப்டீன் முஹம்மது சப்றீன் நான் கிழக்கு மாகாணத்தின் அம் பாறை மாவட்டதில் அட்டாளைச்சேனை எனும் ஊரில் வசித்து வருகிறேன் நான் சேனையூர் சப்றீன் எனும் புனைப்பெயரில் கவிதைகள், பாடல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என எழுதி வருகிறேன் அதுமட்டுமல்லாது இணைய தளங்களில் Read more

பாவேந்தல் பாலமுனை ஃபாறூக் அவர்களுடன்…

இலங்கையின் தலைசிறந்த கவிஞர் களில் ஒருவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் என பல சிறப்புகளும் பன்முகத் திறமையும் கொண்ட இலக்கிய வாதி நீங்கள். உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள்!

நேர்காணல் : தமிழ்நெஞ்சம் அமின்

தமிழ் தென்றலின் தீராக்காதல் பசுமை

மின்னிதழ் / நேர்காணல் மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியை ஆற்றுபவர்கள் மருத்துவர்கள்; எனவேதான் மருத்துவர்களை இறைவனுக்கு ஒப்பானவர்களாக நாம் போற்றுகிறோம். அந்த மருத்துவர்கள் மனிதகுலத்தை நேசிப்பவர்களாக இருக்கும்போது அவர்களது பணி மேலும் சிறக்கும். மனிதகுலத்தைத் தாண்டி உலகில் உள்ள உயிர்களையெல்லாம் நேசிப்பவராக அந்த மருத்துவர் இருப்பின் அவரது பணி நிச்சயமாகப் பாராட்டக் கூடியதாகத்தான் இருக்கும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல தாவர இனங்களின் மேல் அன்பு Read more

ஹைக்கூ திண்ணை 6

ஹைக்கூ (ஜப்பானிய சிறுகவிதைகள்) எழுதும் பாரம்பரிய கலை முதலில் ஜப்பானில் பௌத்த பிக்குகளிடமிருந்து தொடங்கி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த ஆன்மீக கலை வடிவம் அந்த நேரத்தில் இருப்பதை வலியுறுத்துகிறது, கவிதையின் குறுகிய தன்மை (மூன்று வரிகள்) ஜென் பௌத்த தத்துவத்தின் பிரதிபலிப்பாகும். ஜென் பௌத்த தத்துவத்தின் முக்கிய கூறுகளை பிரதிபலிக்கும் 12 ஜப்பானிய ஹைக்கூக்கள் ,இங்கே காண்போம்,

மனம்திறக்கும் ஓசூர் மணிமேகலை

மின்னிதழ் / நேர்காணல் புன்னகையை மென்னகையால் கொண்டு யாவரையும் வசீகரிப்பவர். அவர் பன்முகப்படைப்பாளி. பள்ளி ஆசிரியர், ஓவியர், கவிஞர், பேச்சாளர், சமூகநல உபகாரி இப்படி அடக்கத்துடன் ஒளிர்ந்து நிற்பவர். அடக்கமும் அயராது உழைப்புமாக பரிணமிக்கும் இவர் பல நூல்களைத் தமிழுழகிற்கு தந்தவர். கவியரங்கில் கணீரெனக் கவிபாடி திகைக்கச் செய்பவர். ஆற்றல்மிகு திறமையால் அரங்கில் நடுவராவும் தலைமைதாங்கி சிறப்பிக்கும் வல்லமை பெற்றவர். இவரை தமிழ்நெஞ்சம் நேர்காணல் செய்து மகிழ்வு கொள்கிறது. வாசகர்களே Read more

வள்ளலார் வழியில் வாழும் மருத்துவர்

மின்னிதழ் / நேர்காணல் வணக்கம் ஐயா மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் பொதுவாக மற்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள். தாங்கள் ஒரு பன்முகக் கலைஞராகப் பரிணமித்துள்ளீர்கள். தமிழ்சார்ந்த பணிகளாகட்டும் சமுதாயம் சார்ந்த பணிகளாகட்டும் ஆன்மீகம் சார்ந்த பணிகளாகட்டும் திரைப்படத் துறை சார்ந்த பணிகளாகட்டும் எல்லாவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறீர்கள். அதற்கு முதற்கண் தமிழ்நெஞ்சம் இதழ் சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திப்பு தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் மே 2021 இதழை Read more

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

தன்முனைக் கவிதைகளின் தந்தை

மின்னிதழ் / நேர்காணல் நேர்முகம் கண்டவர் அன்புச்செல்வி சுப்புராஜூ தங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள். வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவனூர் கிராமம் எனது பிறப்பிடம். பள்ளிக்கல்வி முடித்து வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் எனது பட்டப்படிப்பு. பின்னர் மதுரை காமராசர் பல்கலையில் முதுகலை பொருளாதாரம், அண்ணாமலை பல்கலையில் மனிதவள மேம்பாடு பட்டயப் படிப்பு. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 38 ஆண்டுகள் Read more