காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10

பாடல் – 10 கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்த லில. (பொருள்) : கணக்காயர் – நெடுங்கணக்கு முதலியன கற்பிப்பவரை (ஆசிரியரை), இல்லாத – உடையதாயிராத, ஊரும் – ஊரிலிருத்தலும், பிணக்கு – மாறுபட்ட பொருளை, அறுக்கும் – நீக்கும் மூத்தோரை – (கல்விகேள்விகளில்) முதிர்ந்தவரை, இல்லா – உடையதல்லாத, அவைக் களனும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9

பாடல் – 09 பெருமை யுடையா ரினத்தின் அகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. (பொருள்) : பெருமை – பெருந்தன்மை, உடையார் – உடையவருடைய, இனத்தின் – இனத்தினின்றும், அகறல் – நீங்குதலும், உரிமைஇல் – தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை – மாதரை, காமுற்று – விரும்பி, வாழ்தல் – அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8

பாடல் – 08 தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும் தாந்தம்மைக் கூறாப் பொருள். (பொருள்) : தொல் அவையுள் – பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தோன்றும் – தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் – குடிப்பிறப்பும், தொக்கு இருந்த – பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் – நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட – மேன்மைப்பட்ட, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7

பாடல் – 07 வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும் துஞ்சூமன் கண்ட கனா. (பொருள்) : வாளைமீன் – வாளை என்னும் மீன், உள்ளல் – உள்ளான் என்னும் சிறு பறவை, தலைப்படலும் – எடுக்க முயற்சி செய்தலும், ஆள் அல்லான் – ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் – செல்வமுள்ள குடியில், பிறத்தலும் – பிறந்து அதனை ஆளக் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 8

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை. கங்கையைக் கடக்க உதவியவன், இராமன் மீது அளவுகடந்த பற்றினால் இராமனுக்கு உதவியவன் என்றே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்பர் தனது காவியத்தில் குகனுக்கு ஒரு படலத்தை கொடுத்து அவனது சிறப்பியல்புகளை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6

பாடல் – 06 பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக் காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. (பொருள்) : பிறர் – மற்றவர், தன்னை பேணுங்கால் – தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் – நாணுதலும், பேணார் – விரும்பாதவராய், திறன் – தகுதியை, வேறு கூறின் – வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் – அதனைப் பொறுத்தலும், அறவினையை – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 5

பாடல் – 05 வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் – உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரம் காட்டு நெறி. (பொருள்) : வழங்கா – யாவரும் இறங்கப் பாராத, துறை இழிந்து – துறையில் இறங்கி, நீர் போக்கும் – பெரும் நீரில் போதலும், ஒப்ப – தனக்கு ஒப்பாக, விழைவு இல்லா – விருப்பமில்லாத, பெண்டீர் தோள் – வேசையர் தோளை, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4

பாடல் – 04 பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக் காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும் சாவ வுறுவான் தொழில். (பொருள்) : பகை முன்னர் – தன் பகைவர் முன்னே, வாழ்க்கை செயலும் – செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும், தொகை நின்ற – தொகுதியாக நின்ற, பெற்றத்துள் – மாடுகளின் நடுவே, கோல் இன்றி – கோல் இல்லாமல், சேறலும் – செல்லுதலும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3

பாடல் – 03 கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு. (பொருள்) : கல்லார்க்கு – கல்லாதவர்களுடன் (கற்றியாதவார்), இன்னா – இனிமையாக (நட்பாக), ஒழுகலும் – இருப்பதும் (நடப்பதும்), காழ் கொண்ட – கற்புடையாள் (கற்பில் சிறந்த), இல்லாளை- மனைவியை(இல்லத்தை ஆள்பவள்), கோலால் – தடி கொண்டு, புடைத்தலும் – Read more