பாடல் – 09

பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை.

(பொருள்) :

பெருமை – பெருந்தன்மை, உடையார் – உடையவருடைய, இனத்தின் – இனத்தினின்றும், அகறல் – நீங்குதலும், உரிமைஇல் – தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை – மாதரை, காமுற்று – விரும்பி, வாழ்தல் – அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல – சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் – சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் – மூடர், காதலவை – விரும்புபவையாம்; (எ-று.)

(கருத்துரை) :

நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.

பெருமை – அறிவொழுக்கங்களில் மிகுதியுடைமை. அகறல்; தல் விகுதிபெற்ற தொழிற்பெயர். உரிமை கிழமை, பற்று, தன்மனைக்கு உரிமையுடையவள்; மனைவி . காமுற்று : காமுறு – பகுதி, காமம் உறு என்பதன் விகாரம் விழுமிய : பண்படியாய்ப் பிறந்த பலவின்பாற்பெயர். அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழு மக்கள் என்றது மங்கல வழக்கு : முழுமையாகிய மக்கள் : பண்புத்தொகை. படித்து வருந்தி மனத்திலாயினும் உடம்பிலாயினும் சிறிதும் புரைபடாதவர்; அஃதாவது : பிறந்தபடியிருப்பவர், “முழுமகன் சிதடன் இழுதை மூடன்” – திவாகரம். அகறல் வாழ்தல் துணிதல், இவற்றில் உம் என்னும் எண் இடைச்சொல் தொக்கு நின்றது : பெயர்ச் செவ்வெண்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »