பாடல் – 07

வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.

(பொருள்) :

வாளைமீன் – வாளை என்னும் மீன், உள்ளல் – உள்ளான் என்னும் சிறு பறவை, தலைப்படலும் – எடுக்க முயற்சி செய்தலும், ஆள் அல்லான் – ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் – செல்வமுள்ள குடியில், பிறத்தலும் – பிறந்து அதனை ஆளக் கருதுதலும், பல் அவை உள் – கற்றார் பலர் கூடிய சபையில், அஞ்சுவான் – அஞ்சும் இயல்புடையவன், கற்ற – படித்துள்ள, அருநூலும் – அருமையான நூலுணர்ச்சியும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்று செயல்களும், துஞ்சு – தூங்குகின்ற, ஊமன் – ஊமையானவன், கண்ட கனா – கண்ட கனாவைப் போலாம் ; (எ-று.)

(கருத்துரை) :

எங்ஙனம் வாய்பேசாத ஊமையன் தான் கண்ட கனவைப் பிறருக்கு எடுத்துரைத்துப் பயன்படுத்த கூடாதவனாவனோ? அதுபோல உள்ளான் வாளைமீனைத் தாக்குதலும், திறமையில்லாதவன் செல்வக் குடியிற்பிறந்து அதனைக் காப்பாற்றுதலும், சபைக்கு அஞ்சுகின்றவன் படித்த படிப்பும் இம் மூன்றும் பயன்படாதவை.

வாளை மீன் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. மீன் உள்ளல் : இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்; மீனுக்கு என நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். வாளைமீன் உள்ளல் தலைப்படல் என்பது ஒருவன் தனக்கு முடித்தற்கரிய போரைச் செய்து வெற்றிபெற முயலுதல் என்னும் பொருளைக் குறிக்கிறதால் பிறிது மொழிதல் என்னும் அணி, ஆள் : ஆள்தல் என்பதில் தல் விகுதி கெட்டுவந்த முதனிலைத் தொழிற்பெயர். பிறத்தல் : ஆகுபெயர். பல்லவை – பல்+அவை : பண்புத்தொகை. நூல் – நூலுணர்ச்சிக்கு : ஆகுபெயர். கனா – கனவு, இதற்கெதிர்மொழி நனா. நனா – நினைவு. கனாத் தகைமையைத் தலைப்படல் முதலிய மூன்றில் ஆரோபித்துக் கூறுதல் உருவக அணி.

முன் பக்கம் செல்லதொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »