பாடல் – 08

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

(பொருள்) :

தொல் அவையுள் – பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தோன்றும் – தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் – குடிப்பிறப்பும், தொக்கு இருந்த – பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் – நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட – மேன்மைப்பட்ட, கல்வியும் – படிப்பும், வெல் சமத்து -வெல்லும் போரிடத்தே, வேந்து – தம் வேந்தன், உவப்ப – மகிழ, அட்டு – பகைவரைக் கொன்று, ஆர்த்த – நிறைத்த, வென்றியும் – வெற்றியும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தாம் – தாமே, தம்மை – தம்மைக் குறித்து, கூறா – புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் – பொருள்களாம்; (எ-று.)

(கருத்துரை) :

பேர்பெற்ற குடிப்பிறப்பு, சிறந்த கல்வி, வெற்றி மிகுந்த வீரம் இவைதாமே பிறர்க்கு விளங்குவன; இவற்றையுடையவர் தாமே எடுத்துயர்த்தல் பேதைமையுடைத்து; ஆதலால் எடுத்துரைத்த லாகாது.

தொல்லவை – தொன்மை + அவை, தொன்மை – பழைமை, பண்புப் பெயர், நல்லவை – நன்மை+அவை, குடிமை; குடி+குலம் : இஃது ஆகுபெயராய் அதிற் பிறப்பைக் குறிக்கும். தொக்கு – தொகு என்ற பகுதி இரட்டித்து இறந்தகாலங் காட்டியது : வினையெச்சம். மேம்பட்ட – மேன்மைப்பட்ட; படுதல் – உண்டாதல், வேந்து – வேந்தன் தன்மை, வேந்தனுக்கு ஆகுபெயர்; கூற்று. அரசு முதலியவை போல, உவப்ப, அட்டு என்னும் வினையெச்சங்கட்கு முறையே உவ, அடு என்பன முதனிலைகள், ஆர்த்த – முழங்குதலுமாம். வென்றி : தொழிற்பெயர். சமம் – போர், இருவர் எதிர்த்து நிற்றல் என்பது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »