பாடல் – 04

பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்
காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

(பொருள்) :

பகை முன்னர் – தன் பகைவர் முன்னே, வாழ்க்கை செயலும் – செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும், தொகை நின்ற – தொகுதியாக நின்ற, பெற்றத்துள் – மாடுகளின் நடுவே, கோல் இன்றி – கோல் இல்லாமல், சேறலும் – செல்லுதலும், முன் – முன்னே (நின்று), தன்னைக் காய்வானை – தன்னை வருத்துபவனை, கை வாங்கி – முன் விட்டு நீக்கி, கோடலும் – பின் அவனை நட்புக் கொள்ளுதலும், இம்மூன்றும் – ஆகிய இம் மூன்று செயல்களும், சாவ உறுவான் – சாகவேண்டியவனுடைய, தொழில் – செய்கைகளாம்; (எ-று.)

(கருத்து) :

பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.

பகை – பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் – பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் – பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் – ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் – இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »