பாடல் – 05

வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் – உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.

(பொருள்) :

வழங்கா – யாவரும் இறங்கப் பாராத, துறை இழிந்து – துறையில் இறங்கி, நீர் போக்கும் – பெரும் நீரில் போதலும், ஒப்ப – தனக்கு ஒப்பாக, விழைவு இல்லா – விருப்பமில்லாத, பெண்டீர் தோள் – வேசையர் தோளை, சேர்வு – சேர்தலும், உழந்து – வருந்த, விருந்தினனாய் – பிறர்க்கு விருந்தாளியாகி, வேற்றூர் – அயலூரில், புகலும் – புகுதலும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், அரும் – (ஒருவனுக்கு) அரிய, துயரம் – துன்பத்தை, காட்டும் நெறி – காட்டும் வழியாம்; (எ-று.)

(கருத்து) :

ஆறு முதலியவற்றிற் பழகாத துறையில் இறங்கிச் செல்லுதலும், தன்மேற் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் செல்லுதலும் இன்பமன்றித் துன்பத்தையே செய்யும்.

வழங்காத் துறை – வழங்காத துறை, வழங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு – போதல் : தொழிற்பெயர், ஒப்ப : செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஓ : பகுதி, விழைவு : தொழிற்பெயர், இல்லா – இல்லாத – இல்லாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெண்டீர் – குலமாதர் அல்லாத வேசையர், பெண்டு+ஈர் : பல்லோர் படர்க்கைப் பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »