யாளியும்… சக்தியும்… 4
4 சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை. சிலநாட்கள் நகர்ந்தது… பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை, பிஞ்சு விரல்களால் தூவித் தூவியே… சக்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.. ‘இந்தா மா…! சக்தி… நாளைக்கு, தாத்தா கூட ஊருக்குப் போகனும். வந்து, ஒரு வாரம் ஆச்சு.ல… அடுத்தவாரம் பள்ளிக்கூடம் திறக்குறாங்கலாம், அம்மா, அப்பா ஊருக்கு கூட்டியாரச் சொன்னாங்க… சரியா..? டா..! தங்கம்.’ ‘ம், சரிங்க பாட்டி..! Read more

