யாளியும்… சக்தியும்… 4

4 சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை. சிலநாட்கள் நகர்ந்தது… பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை, பிஞ்சு விரல்களால் தூவித் தூவியே… சக்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.. ‘இந்தா மா…! சக்தி… நாளைக்கு, தாத்தா கூட ஊருக்குப் போகனும். வந்து, ஒரு வாரம் ஆச்சு.ல… அடுத்தவாரம் பள்ளிக்கூடம் திறக்குறாங்கலாம், அம்மா, அப்பா ஊருக்கு கூட்டியாரச் சொன்னாங்க… சரியா..? டா..! தங்கம்.’ ‘ம், சரிங்க பாட்டி..! Read more

யாளியும்… சக்தியும்… 3

3 ‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள். ‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’ ‘ம்.ம்கூம்… சரிங்க. தாத்தா..!’ தாத்தாவும், பேத்தியும், களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தனர். ‘இவ்வளவு கூட்டத்துல… பேத்தி சொல்லக் கேட்டு, போகனுமா..? சாயங்காலம் போயிருக்கலாம்.ல’ என்றபடியே… ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தார் பாட்டி. சிறிது Read more

யாளியும்… சக்தியும்… 2

2 ‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார். வண்ண வண்ண பலூன்கள், ராட்டினங்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் புதிது புதிதாக சாலையின் இருபுறமும் நிறைந்து இருக்க… சக்தி மயங்கி விழுந்ததை மறக்கச் செய்ய ‘ஏதாச்சும் விளையாட்டுச் சாமான்கள் வேணுமா..? தங்கம்’ என்று, கேட்க… ‘அதெல்லாம், ஒன்னும் வேணாம்.ங்க தாத்தா..!’ என்றபடியே… தலையாட்டி பொம்மை, தலையைத் Read more

யாளியும்… சக்தியும்… 1

1 ‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…! எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’ “சக்தி” பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில், நமது குழந்தையாகிடும் அன்பும், சிரிப்பும் மிகுந்தவள். அம்மன் சிலை போல அழகு முகம் கொண்டவள். கோபக்கார சுட்டிக்குழந்தை இவள். பூர்வீகம் திருநெல்வேலியில் இருந்தாலும், பள்ளி விடுமுறைக்காக தஞ்சையில் பாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளாள். ‘என்னாங்க பாட்டி..! கூப்புட்டீங்களா..? பக்கத்து தெருவுல… கொட்டு அடுச்சு, கொழவை போட்டு Read more

யாளியும்… சக்தியும்…

முன்னுரை உலக அரங்கில் சில எலும்புத் துண்டுகளை மட்டுமே வைத்து, டைனோசருக்கு உருவம் கொடுத்து, பல நாவல்களும், பல்வேறு திரைப்படங்களும் வெளியிட்டு, தன் ஆளுமையை நிலைநாட்டிய மேலை நாட்டினருக்கு மத்தியில்… “கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியில்” பிறந்த, நம் தமிழ் இனத்தின் கலை, இலக்கியங்களோடு புதைந்தும், கோவில் பிரகாரங்களில் தன் வரலாற்றுச் சுவடுகளை, இன்றும் சுமந்து கொண்டு இருக்கும், யாளிகள் பற்றிய நூல்களோ..? விரல்விட்டு, எண்ணும் படியே இருப்பது Read more

யாளி – 4

யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், இதுபோல் ஏன்..? இதுவரை எழுதவில்லை… ஆங்கில படங்களுக்கு நிகராக ஒரு புனைக் கதையை நம்மால் ஏன்..? உருவாக்க முடியவில்லை… என, கேள்வி கேட்டது அந்த புத்தகம். அந்த புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு Read more

யாளி – 3

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆன்மீகம்:~ ~~~~~~~~ ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்..! யாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர். சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார். இதற்கான பிண்ணனி Read more

யாளி – 1

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். நம்மில் எத்தனை பேருக்கு, யாளி(யாழி) என்றால் என்னவென்று தெரியும்..? யாளிகள்:~ ~~~~~~~~ தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற Read more