எழுத்துத் துறையே முழு நேர தொழில்

மின்னிதழ் / நேர்காணல் ரேணுகா குணசேகரன், ‘க்ளோவர் தாட்ஸ்’ என்கிற புத்தகங்களுக்கான ஆலோசனை, எழுத்து, மொழிபெயர்ப்பு, பதிப்பு ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இந்திய மகளிர் வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் ஒரு பிரிவான, தமிழ்நாடு பதிப்பகத் துறையின் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய தொழில் மற்றும் சமூக சேவை குறித்த அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார். நேர்காணல் : தமிழ்நெஞ்சம் Read more

கவிஞர் அம்பிகா குமரன்

மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் : பொன்மணிதாசன் வணக்கம். தாங்கள் இன்று பேசப்படும் பெண்கவிஞர்களில் ஒருவராகத் திகழுகிறீர்கள். அத்தகையப் புகழுக்கு காரணமாகத் திகழுவது கவிதைதான் என்பதில் சந்தேகமில்லை.அத்தகையக் கவிதைகளை எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்குவது எது? கவிஞர்களில் ஆண் பெண் என்ற இருபாலினத்தவரும் கவிஞர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு பெண் தன்னுடைய குடும்பச் சூழல், சமூகத்தின் பல்வேறு விதமான அழுத்தங்கள் போன்றவற்றைக் கடந்து தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதே Read more

காதல் கவித்துளிகள்

  காதல் கவித்துளிகள் பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு காதல் காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல். காதல் அனுபவம் எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும். இதனைக் கடக்காதவர் எவரும் இருக்க முடியாது. காதல் யார்மீது வேண்டுமானாலும் வரலாம்; எதன் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆசைப்பட்ட பொருள் அல்லது ஆசைப்பட்ட மனிதர் தன் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அதைவிடப் பெரிய இன்பம் Read more

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா! அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது. அஸர் தொழுகையை நிறைவேற்றிய கையோடு பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பாவேந்தலின் நண்பருமான கவிஞர் எழுகவி ஜெலீல் அவர்களால் அழைத்து வரப்பட்டு  விழா மண்டபத்தின் தெற்கே சுமார் இருநூறு மீட்டர் Read more

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது

மு.முருகேஷ்

தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் – ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.

கவிமாமணி வை. இராமதாசு காந்தி

மின்னிதழ் / நேர்காணல் இன்று முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அதிகமாக அறியப்படுபவர் கவிமாமணி வை. இராமதாசு காந்தி அவர்கள்.பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த புதுச்சேரியில் வாழும் இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஐயாவிடம் தமிழ்நெஞ்சத்திற்கு பேட்டி என்றதுமே இன்முகத்தோடு சம்மதித்து வழங்கினார். அந்த பதில்களைப் பார்ப்போமே! சந்திப்பு : பொன்மணிதாசன் ஜனவரி 2022 முதல் இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் Read more

முனைவர் லட்சுமி ப்ரியா

மின்னிதழ் / நேர்காணல் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் இன்று தமிழில் கதைகளோ, கவிதைகளோ எழுத எண்ணி, அதை நூலாக்கும் வழி தெரியாது தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எழுத்துத் துறையில் நல்லதொரு பாதையைக் காட்டும் சிறப்பான பணியினை ஆற்றிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டின் கொடுந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 150 நூல்களை வெளியிட்டு, பல கவிஞர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறது.. இதன் வளர்ச்சியில் நிர்வாகியாக இருந்து முன்னெடுத்துச் செல்லும் முனைவர் லட்சுமிப்ரியா Read more

கவிக்கோ துரை வசந்தராசன்

மின்னிதழ் / நேர்காணல் பாவேந்தர் பரம்பரை விழுது என புலவர் புலமைப்பித்தன் அவர்களால் அடையாளப் படுத்தப் பட்டவர் கவிக்கோ துரைவசந்தராசன் அவர்கள். தந்தைப் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைவழி ஈர்க்கப்பட்டு இன்றும் புரட்சிகரமான எழுத்துகளால் தன்னை நிலை நாட்டிக்கொண்டிருப்பவர்.தாம் வசிக்கும் மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் 1984ல் தொடங்கப்பட்ட பண்ணைத் தமிழ்ச்சங்கம் மூலம் எண்ணற்ற இலக்கியவாதிகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துகளை ஏந்தாத ஏடுகளே இல்லை எனலாம். பல்வேறு விருதுகள் புதுச்சேரி Read more

ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென்.
சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்…
பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது.
அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும்
கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

அத்திப்பூ நீரை லத்தீப் நேர்காணல்

மின்னிதழ் / நேர்காணல் வணக்கம். தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மூலம் தமிழ்நெஞ்சம் வாசகர்களைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நெஞ்சம் வாசகர் என்ற முறையிலும் எனது மனமார்ந்த நன்றி. 1. பண்டைய இலக்கியங்கள் இன்றும் பேசப்படுவதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இலக்கு நோக்கிய படைப்புகள் பண்டைய இலக்கியங்கள் என்பதும், இதயத்தூய்மை படைப்பாளர்களுடையது என்பதும், படைப்புக்கும் படைப்பாளனுக் கும் இடைவெளி இல்லாமல் அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதும் பல Read more