புதுக் கவிதை

வாழ்வியம்

பெருங்கடலைத் தாண்டி
வந்துவிட்டோம்,

தேடிவந்த எதுவுமே
இங்கில்லை…

தொலைத்தவை
தொலைந்துவிட்டன…

இனி புதியதோர் தேடலில்
தொலையலாம், வா!

கடக்க எத்தனையோ
கடல்கள் காத்திருக்கின்றன…

 » Read more about: வாழ்வியம்  »

மரபுக் கவிதை

தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!

நசையெலாம் நனவாய் நிகழ்த்திட
—– அசைமலர் அடர் நந்தவனத்தே
பூசை கொள் தலைவன் வருகைக்காய்
—– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள்
கண்ணனவன் கழற் கூடிடுவான்
—– முன்னமவன் செப்பிய வாக்கால்
கன்னம் வைக்கும் கைச்சிறையில்
—–

 » Read more about: தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!  »

பழங்கதை

பலன்

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.

அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.

 » Read more about: பலன்  »

புதுக் கவிதை

ஒன்றையேனும் நிகழ்த்திவிடு

சிலிர்த்துக் கொண்டே இருக்க
உன் புன்னகை தூரலை பொழிந்துவிடு

தவித்துக் கொண்டே இருக்க
தழுவிடும் கணங்கள் தந்துவிடு

ரசித்துக் கொண்டே இருக்க
காதல் ராகம் இசைத்துவிடு

கடந்து கொண்டே இருக்க
பயணத்தின் பாதையை
பகிர்ந்து விடு

மிளிர்ந்துகொண்டே இருக்க
உன் வண்ணம் என்னில் கலந்துவிடு

தொலைந்து கொண்டே இருக்க உன் சாயலை
என்னில் சேர்த்துவிடு

நெகிழ்ந்து கொண்டே இருக்க
நிழல் நொடிகளை என்னில் நிகழ்த்தி விடு

உயிர்த்துக் கொண்டே இருக்க
உயிரினில் மூச்சாய் கலந்துவிடு

இத்தனை கோரிக்கை உன்னிடம் வைத்தேன்

ஒன்றையேனும் நிகழ்த்திவிடு

Image may contain: cloud, sky, ocean, one or more people, outdoor, water and nature  » Read more about: ஒன்றையேனும் நிகழ்த்திவிடு  »

புதுக் கவிதை

என்னருகில் நீயிருந்தால்

அழகாகும் என் இதயம்
நீ அருகில் இருந்துவிட்டால்

உன்னோடு உரையாடும்
ஒளித் தருணம் நீண்டிடுமே

சட்டெனவே சரிந்துவிழும்
என் மனதோ உன்னிடத்தில்

சத்தமில்லா பொழுதுகளில்
கரைந்திடுவோம் காற்றினிலே

வாழ்தலையும் வீழ்த்தலையும்
வரைந்திடுவாய் தூரிகையாய்

நித்தமும் என் கனவுகளை
நீ நிறைப்பாய் வண்ணங்களால்

நிலம் வீழும் நிழலெனவே
இணைந்திடுவோம் ஓருயிராய்

 » Read more about: என்னருகில் நீயிருந்தால்  »

நூல்கள் அறிமுகம்

மீண்டும் பூக்கும்

mpf“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்”

 » Read more about: மீண்டும் பூக்கும்  »

குடும்பம்

குந்தைகளைத் தண்டிக்கும்போது…

குந்தைகளைத் தண்டிக்கும்போது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை..
—————————————————————–
* குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்….பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

 » Read more about: குந்தைகளைத் தண்டிக்கும்போது…  »

By Admin, ago
புதுக் கவிதை

பூசணிக்காய்

மென்று துப்பிய செரிக்காத
மீதங்களாய் குவிகிறது
ரத்தம் தோய்ந்த சதையால் ஆன
புதியதோர் எவெரெஸ்ட்டு மலை

பயிராய் வளரும் காலத்தை
காணாமலேயே விதைகளுக்கு
இவர்கள்தம் ரத்தமும் சதையும்
உரமாகி கொண்டிருக்கின்றது

குண்டு தகர்த்தி
தொலைந்த பரம்பரை வீடுகள்
புதியதோர் தலைமுறைக்கு
விசால மயான தேசமாகின்றது

காலமெனும் தொனியிலேறி
அலைகடல் தாண்டுகையில்
குடல்பசி தாங்காமல்
மீன் பசி தீர்க்கின்றனர்

நம்மை போன்ற தோற்றத்தில்
விடுமுறை பீச்சோரமாய் ஒதுங்கும்
இவர்களின் மீதங்கள் கேட்பாரின்றி
கண்டு ம(றை)றக்கப்படுகின்றன

பழம் பணக்காரர்கள் காய்நகர்த்தி
அகந்தைமிகு அரசியல்வாதியை
ஆட்டிவைக்க ஏகபோகமாக
செழிக்கிறது ஆயுத உற்பத்தி

இந்த பூசணிக்காயை மறைக்க
ஒரு பானையில் அரிசி
வெந்துகொண்டிருக்கிறது
வாழ்க மனிதம்!

 » Read more about: பூசணிக்காய்  »

புதுக் கவிதை

அகதி

தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …

பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …

 » Read more about: அகதி  »

வெண்பா

பெண்மை போற்றுதும்

நேரிசை வெண்பா வகை

வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை
வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்
எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே
விண்ணுலகம் போற்றும் வியந்து

வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்
வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே
விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை
விண்ணுலகம் போற்றும் வியந்து

எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்
எண்ணியே நண்ணுக ஏந்திழை –

 » Read more about: பெண்மை போற்றுதும்  »