மென்று துப்பிய செரிக்காத
மீதங்களாய் குவிகிறது
ரத்தம் தோய்ந்த சதையால் ஆன
புதியதோர் எவெரெஸ்ட்டு மலை

பயிராய் வளரும் காலத்தை
காணாமலேயே விதைகளுக்கு
இவர்கள்தம் ரத்தமும் சதையும்
உரமாகி கொண்டிருக்கின்றது

குண்டு தகர்த்தி
தொலைந்த பரம்பரை வீடுகள்
புதியதோர் தலைமுறைக்கு
விசால மயான தேசமாகின்றது

காலமெனும் தொனியிலேறி
அலைகடல் தாண்டுகையில்
குடல்பசி தாங்காமல்
மீன் பசி தீர்க்கின்றனர்

நம்மை போன்ற தோற்றத்தில்
விடுமுறை பீச்சோரமாய் ஒதுங்கும்
இவர்களின் மீதங்கள் கேட்பாரின்றி
கண்டு ம(றை)றக்கப்படுகின்றன

பழம் பணக்காரர்கள் காய்நகர்த்தி
அகந்தைமிகு அரசியல்வாதியை
ஆட்டிவைக்க ஏகபோகமாக
செழிக்கிறது ஆயுத உற்பத்தி

இந்த பூசணிக்காயை மறைக்க
ஒரு பானையில் அரிசி
வெந்துகொண்டிருக்கிறது
வாழ்க மனிதம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்