தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …

பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …

எங்களின் கடைசி சிலரால்
கொல்லப்படப்போகும் சீவன்களின்
கடைசி நொடிகளை
அவர்கள்தம் முகத்தில் காண்கிறேன்

தாண்டியதும் இவ்வெல்லையை
எங்கே செல்லப் போகிறோம்?
ஆகாசத்தின் கடைசிக்கு
வந்திட்ட ஊர்க்குருவி கேட்கின்றது …

ஆகின் இவள் எங்களின் தாய்
சற்றேனும் கருணை கசிந்திருக்கலாம்
நாங்களோ நிஜக்கண்ணாடியை
கனவில் கல் வீட்டடிக்கும் சாதி

வாழ்வாயினும் தொலைந்தது
காப்பாற்றியது உயிரைமட்டுமே
அதற்கேனும் கடவுசீட்டு
கொடுங்களேன் …

கிடக்கும் ஆவியாய்
எங்கள் செங்குருதியில்
நர மாமிசத்தால்
பாட்டெழுதிகிறோம்

முடிந்ததும் ஜீவன்
தாவரங்கள் சயனிக்கும் இடத்தில்
தலைசாய்த்து படுக்கின்றோம்
பெயரற்ற கல்லறையாக!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்