மரபுக் கவிதை

பிரியமான புத்தாண்டு!

பிறக்கப் போகும் புத்தாண்டு
. பிரிய மான புத்தாண்டு
பறந்து வந்து வானத்தில்
. பரிதி யாகப் பூத்திடுமே !
சிறந்த பலன்கள் இதற்குண்டு
. செப்பு கின்றாள் காதுகளைத்
திறந்து வைத்துக் கேளுங்கள்
.

 » Read more about: பிரியமான புத்தாண்டு!  »

By Admin, ago
புதுக் கவிதை

பூமியின் ஜாதகம்

பூமிக்குப் போதாத காலம்!
ஒன்றும் புரியாமல்
அமர்ந்திருந்த
என்னிடம் வந்து..!
பூமி தன் உள்ளங்கையைக்
காண்பித்தது..!

நேரம் நன்றாக இல்லையாம்  –  நான்
கைரேகை பார்த்து
பலன் சொல்ல வேண்டுமாம்..!

 » Read more about: பூமியின் ஜாதகம்  »

புதுக் கவிதை

கன்னியின் கண்ணீர் 

காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா?

தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா?

 » Read more about: கன்னியின் கண்ணீர்   »

மரபுக் கவிதை

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

 » Read more about: உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

காட்டு நெறிஞ்சி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.

முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.

 » Read more about: காட்டு நெறிஞ்சி  »

புதுக் கவிதை

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

 » Read more about: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது  »

மரபுக் கவிதை

கறுப்புத் துணியைக் கழற்றி எறி!

வாய்மை வெல்லும் எனச்சொல்லி
….. வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
….. தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
…..

 » Read more about: கறுப்புத் துணியைக் கழற்றி எறி!  »

ஆன்மீகம்

குணசீலர்

சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும்,

 » Read more about: குணசீலர்  »

வெண்பா

பாரதிக்குப் புகழ்மாலை

(கட்டளைக் கலித்துறை)

பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே
பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே
மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன்
பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே!          

 » Read more about: பாரதிக்குப் புகழ்மாலை  »

புதுக் கவிதை

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..!

சிவந்த வானமாய் அவன் கண்கள் ..!
சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..!

 » Read more about: அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!  »