விதி
துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர் நன்றே விதியால் நலிந்தோம் என்றே! இன்பம் உற்றோர் ஏனோ விதியை எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை! மதியைக் கொண்டு வறுமை போக்கி சதியை வெல்லல் விதியின் செயலே! முன்னைப் பிறப்பில் முடித்த வினைகள் மண்ணில் ஆன்மா மீண்டும் மலர்ந்தால் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்! பாடி இனிமைப் படைக்கும் ஐயா நல்லார் புரிந்த நன்னெறி வினைகள்! பொல்லார் புரிந்த புன்மைச் செயலால் வாடிக் கிடப்பர் Read more