காரைக் காலின் அருகினிலே
கமழும் ‘நிரவி’ நல்லூரில்,
ஊரைக் காக்கும் நல்லோர்தம்
உண்மை நெறியைக் காத்ததுவாம்!
ஏரைப் போன்றே உழுதுலகில்
இன்பப் பயிரை விளைத்ததுவாம்!
தேரை நிகர்த்த பொலிவோடு
திகழும் இனிய தமிழ்நெஞ்சம்!

பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!

புல்லும் பூண்டும் முளைக்காதே!
புவியில் இனிமை தழைக்காதே!
வெல்லும் வெறியால் மண்ணுலகை
விரைந்து பொசுக்கும் பெரும்போரால்!
செல்லும் வழியில் முள்விதையைச்
செரிதல் ஏனோ கொடியோரே!
சொல்லும் வல்ல கருத்தாலே
சுடர்க உயர்ந்து தமிழ்நெஞ்சம்!

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.