தமிழர் நெஞ்சம் தமிழ்நெஞ்சம் – அது
தமிழர் வாழ்வில் கமழ்நெஞ்சம்;
இமயம் போலும் புகழ்நெஞ்சம் – அது
என்றும் தமிழர் மகிழ்நெஞ்சம்.

வீர வித்தை நடும்நெஞ்சம் – அது
வெற்றி விளைவைத் தொடும்நெஞ்சம்
ஈர அன்பைப் பொழிநெஞ்சம் – பண்பு
ஏந்தி நடக்கும் வழிநெஞ்சம்.

மானம் காக்கும் அறநெஞ்சம் – உலக
மனத்தைக் கவரும் அறநெஞ்சம்
ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் – நலம்
இயற்றும் கடமை கெடாநெஞ்சம்.

நீதி வகுத்த நன்நெஞ்சம் – சங்க
நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம்
ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் – வேறு
அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.