ஆல்பத்தில் சிரிக்கும்
உறவு முகங்கள்
ஆபத்தில் உதவிகேட்க
அவசரமாய் இறுகும்

மருந்து தடவி
ஆறாத காயம்
தந்தையின்
கண்ணீர் துளிபட
காணாமல் போகும்

ஆலய சிலை முகத்தில்
அகப்படாத கருணை
அடுப்படியில் வேகும்
அன்னையின் கண்களில்

பள்ளி ஆசிரியர்
பயிற்றுவிக்காதது
அனுபவ ஆசானால்
ஆழமாய் பதியும்

பே சேனல் தராத
பிரமிப்பை வழங்கும்
பால்நிலா பிடிக்க
பனித்துளி விரித்த
பசிய புல்வெளி

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.