மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு…

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு…

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை…

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்…

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்…

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்…

நானாக நானிருக்க
நட்பே…
நீ எனக்கு
நட்பாக வேண்டும்…

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.