தொடர்  – 41

உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியச் சொல் ஹைக்கூ..

அனைத்துக் கவிஞர்களையும் ஈர்க்கும் ஒரு வடிவமாகவும்..அனைவரும் எழுதத் துடிக்கும் ஒரு வடிவமாகவும் ஹைக்கூ விளங்குகிறது.

எந்தக் கவிதை வடிவமும் பெறாத..ஓர் உயரிய இடத்தை ஹைக்கூ மட்டும் எப்படி பெற்றது..?!

எளிய வடிவம் ஒரு காரணம்..கவிஞனோடு வாசகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைக்கும் யுக்தி..

ஒரு கருத்தைச் சொல்ல வந்து ஈற்றடியில் எதிர்பாரா ஒரு புதிய திருப்பத்தை தந்து ஆச்சரியப்படச் செய்யும் வடிவம்…கவிதைகளுக்கே உகந்த கற்பனை..உவமை…உருவகம் என எதுவுமே இல்லாது படைக்கப்படும் வடிவ முறை..குறைவான வார்த்தைகளைக் கொண்டு மிக அடர்த்தியானப் பொருளைத் தரும் கவிதை எனப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம்..

அத்துடன்..ஒரு விசயத்தை நேரடியாக சொல்லாமலும்…கவிதை வாயிலாக உணர்த்தி விடவும் இவ்வடிவம் வகை செய்கிறது..ஹைக்கூவில் சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவதும்..கவிதையில் அழகு சேர்த்து விடுகிறது..அது எப்படி..எனக் காணலாம்.

தாத்தாவின் கரம்பற்றி
நடக்கும் குழந்தை.
தள்ளாடும் நிழல்.

  • கன்னிக்கோவில் ராஜா ( தொப்புள்கொடி)

இங்கு நிழல் இருக்கிறது..ஆனால் நிழல் வர காரணமான வெயில் அல்லது இரவு நேரத்து வெளிச்சம் இங்கு குறிப்பாய் சொல்லப்படவில்லை..ஆக மறைமுகமாய் இக்கவிதைப் பகல்பொழுதையோ..அல்லது இரவுப் பொழுதையோ.. ஊர்ஜிதப்படுத்தி விட்டு நகர்கிறது..குழந்தையின் கரம் பற்றி நடக்கும் முதியவரின் நிழல் தள்ளாடுகிறதா அல்லது அப்போது தான் நடைபயிலும் அக்குழந்தையின் நடை தள்ளாடுகிறதா…இதுவும் சொல்லப்பட வில்லை…வாசகரே ஊகித்துக் கொள்ள பல கோணங்கள்.

வரையப்பட்ட ஓவியத்தின் …ஓவியத்தை விட அதை சுற்றியிருக்கும் வெற்று இடங்கள் நிறையக் காட்சிகளை மனதில் விதைக்கும் சமயத்தில்… அதுபோல இது.

அதே போல்.. என்னுடைய கவிதை ஒன்று

படரும் கொடி
தேடிக் கொண்டிருக்கிறது
தனக்கான இடம்.

அது கொடிதானா..அல்லது எவருடைய துணையையாவது தேடியலையும் ஒரு உயிரா..படரும் கொடி எனும் போது பற்றுதல் தேடும் பெண்ணாகவும் கொள்ள வாய்ப்பிருக்கிறது…ஹைக்கூ இப்படித்தான்..கவிதையும் காட்சியும் நமக்கொன்றை உணர்த்திவிட்டு நகர்ந்து விடும்..அதிலிருந்து நாம் தான்..பல கோணங்களில் சிந்தித்து..ஒவ்வொரு அடிக்கும் முப்பது அர்த்தங்களை சிருஷ்டித்துக் கொண்டிருப்போம்..

இவ்வாறான ஒரு செயல்பாட்டின் காரணமாகவே ஹைக்கூ கவிதையுலகில் கோலோச்சுகிறது எனலாம்.

இன்னும் வரும்…

 முன் தொடர்


1 Comment

Snipfeed · ஏப்ரல் 16, 2025 at 15 h 54 min

I am really impressed along with your writing skills as smartly as
with the layout for your weblog. Is this a paid theme or did you modify it your self?
Either way keep up the nice high quality writing, it’s uncommon to look a nice weblog like
this one nowadays. Lemlist!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.