தொடர் – 42

ரென்கா எனப்படும் அந்தாதி ஹைக்கூ கவிதை முறை.

ஹைக்கூ எழுத்தாளனையும்..வாசகனையும் இணைக்கும் ஓர் அற்புதக் கவிதை வடிவம்..எழுத்தாளன் எழுதிய கோணத்தையும்..பொருளையும் தான் வாசகனும் அறிந்து உணர வேண்டுமென்பதில்லை..வாசகனுக்கு ஹைக்கூ பலவித உணர்வலைகளை உண்டு பண்ணி நகரும் ஆற்றல் கொண்டது.

ஹைக்கூ தோன்றிய ஜப்பான் நாட்டில் ஹைக்கூ இயற்கை சார்ந்தும்..ஜென் சார்ந்தும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது..ஆனால் பலவித பருவ மாற்றங்களை கொண்டு விளங்கும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் இங்குள்ள பண்பாடு..கலாச்சாரம் சார்ந்தே ஹைக்கூ இயங்குகிறது..இதில் ஒன்றும் தவறும் இல்லை..ஜப்பானிய நடைமுறையை பின்பற்றியே இங்கும் கவிதை படைக்க வேண்டுமென்ற நிர்பந்தம் இருப்பின் ஹைக்கூ இங்கு இந்தளவு பிரபலமாகியிருக்க இயலாது.

ஹைக்கூ..சென்ரியு என இருவடிவங்களையும் உள்ளடக்கி தொடர் பாடலாகப் பாடப் படுவதே #ரென்கா எனப்படும் ஹைக்கூ தொடர் கவிதை.

ரென்கா எனப்படும் ஹைக்கூ அந்தாதி..

ஜென் புத்தமதத் துறவிகளால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு கவிதை வடிவமே ஹைக்கூ என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்..அவர்களது வாழ்வியல் சார்ந்து அவை படைக்கப் பட்டது..

மாலை வேளைகளில்..ஏதாவது பண்டிகை காலங்களில் ஜென் புத்தமதத் துறவிகள் அனைவரும் ஒன்று கூடும் காலங்களில் அவர்கள் ரென்கா எனப்படும் இந்த தொடர் சுற்றுக் கவிதை விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

தலைமை குரு ஒரு ஹைக்கூவை ( அப்போது அதை ஹொக்கு என்றே அழைத்தனர் ) முன் மொழிய..அதை தொடர்ந்து அதன் ஈற்றடியை முதலடியாகக் கொண்டு அடுத்தவர் ஒரு கவிதையை சொல்வார்..இக்கவிதையானது..அவர்கள் அன்றைய நாளில் சந்தித்த பிரச்சனை..நிகழ்வு…கண்ட காட்சி..சந்தித்த மனிதருக்கு நேர்ந்த துன்பம்..இன்பம் என பல கோணங்களாய் விரியும்…இக்கவிதை தொடர் முடிவிற்குப் பின் அப்பாடசாலையில் தேவைப்படும் அல்லது நிறைவேற்றபட வேண்டிய பல நிகழ்வுகள் கூட அறியப்பட்டு நிறைவேற்றப்படும்..

இவ் வகையான ரென்காவில் ஹைக்கூ கவிஞர் பாஷோ முன்னோடிக் கவிஞர் ஆவார்..சாமுராய் வீரராய் இருந்தும் ஆசிரியர் பணி புரிந்த இவர் தொழில் நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகி பயணித்துக் கொண்டே இருப்பார்..

ரென்கா கவிதையில் ஹைக்கூவை ஒட்டி அடுத்து வந்த பல கவிதைகளே சென்ரியுவாக பின்னாளில் பிறப்பெடுத்தது..ரென்காவை பிரபல படுத்தியதும் பாஷோவே ஆவார்.

இன்றும் இந்த தொடர் பாடல் முறை பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

ஹைக்கூ கவிதையை தமிழில் நாம் எழுதிப் பழக ரென்காவும் ஒரு சிறந்த பயிற்சி முறையாகும்.

இன்னும் வரும்…

 முன் தொடர் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.