தொடர் – 33

ஹைக்கூ என்பது தமிழில் இன்று பலரால் கவனிக்கப்படும் விதத்தில் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாது பலரால் ஆரோக்கியமாய் விமர்சிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

இருப்பினும்… ஹைக்கூவைப் பற்றிய புரிதல்கள் பலரிடையே வேறுபட்டே திகழ்கிறது. இதில் ஹைக்கூவை எழுதும் கவிஞர்களும் விதிவிலக்கல்ல.

ஹைக்கூ எழுதப்படும் விதத்thai வைத்து அதனை பொதுவில்… மூன்று வகையாக பிரித்துவிடலாம்.

  1. நேரடிக் காட்சிப் ( View ) பதிவினை மட்டும் காட்டி நகரும் ஹைக்கூ ஒரு முறை.
  2. ஹைக்கூ வாயிலாக கனமான ஒரு கருத்தினைக் ( Message ) கூறி நகர்வது ஒரு முறை.
  3. மூன்றாவது ஒரு வகையில்… ஹைக்கூவில் அழகிய காட்சியும் விரியும்… கூடவே அதில் ஒரு கருத்தும் ( View & Message ) இருக்கும்.

ஹைக்கூ எழுதப்படும் முறைகளை இவ்வாறு வகைப்படுத்தி விடலாம்..

ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுடன் பார்த்துவிடலாமா…

முதலில் காட்சிப்பதிவு ஹைக்கூ.

பெயரில்லா மலையொன்றை
காலைப்பனி மூடும்
வசந்த காலம்.

பழைய குளம்
தவளை குதிக்க
நீரின் சப்தம்.

  • மட்சுவோ பாஷோ..

இவ்விரண்டு ஹைக்கூவும் நேரடி காட்சிப் பதிவை மட்டுமே ஹைக்கூவில் சொல்லி நகர்வதை காணலாம். ஹைக்கூ வாசி்த்து முடிந்தவுடன் அக்காட்சியானது நம்முடைய மனக்கண்ணில் விரியும்.

இனி இரண்டாவதாக..

கருத்தை சொல்லி நகரும் ஹைக்கூ…

இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு வர
விளக்குகள் தேவையில்லை.

  • அருணாச்சல சிவா

நான் பிறந்தேன்
பின் இறந்தே ஆகவேண்டும்
அவ்வளவே.

  • கிசேய்

இவையனைத்தும் கருத்துக்களை சொல்லி நகரும் ஹைக்கூக்கள்.

இவைகளை வாசிக்கும் போதோ.. கேட்கும் போதோ.. கருத்து மட்டுமே நம்முள் இறங்கும்.

இனி… மூன்றாவதான..காட்சியோடு..கருத்தையும் சொல்லி நகரும் ஹைக்கூ.

மரணம் நிகழ்ந்த வீடு
காலி நாற்காலிகள்
முழுதும் மௌனம்.

  • ஜெ.பிராங்க்ளின் குமார்

அடர்மரத்தில் காக்கைக் கூடு
உள்ளிருந்து தரையிறங்குகிறது
ஒரு மென்னிறகு.

  • வைகறை

இவ்விரண்டு ஹைக்கூவை வாசிக்கும் போது காட்சியும் கண்முன் விரியும்..கூடவே அக்கவிதை உணர்த்தும் கனமும் மனதினை அழுத்தும்..

ஹைக்கூவை எழுதும் முறைகளை வைத்து இவ்வாறாக மூன்று வகையில் பிரிக்கலாம். ஹைக்கூ பொதுவில் பல கோணங்களோடு நம்முள் விரிந்தாலும் வகைபடுத்துதல் எனும் போது இம்மூன்று பிரிவுகளில் அடங்கி விடும்.

இன்று ஹைக்கூவில் அடிக்கடி கேட்கும் வார்த்தை “சாயல் கவிதை…போலச் செய்தல் ” என்பது.. போன்ற விசயத்தை அடுத்துக் காணலாம்.

இன்னும் வரும்…

முன் தொடர்


3 Comments

職棒 · ஜனவரி 17, 2026 at 0 h 44 min

cpbl粉絲必備的資訊平台,提供最即時的cpbl新聞、球員數據分析,以及專業的比賽預測。

livescore · ஜனவரி 17, 2026 at 23 h 25 min

我們的台灣運彩官網官方授權專家團隊第一時間更新官方各大聯盟的比賽分析,包括NBA、MLB、中華職棒等。

icc men's t20 world cup warm-up matches · ஜனவரி 21, 2026 at 0 h 15 min

Winning goals, match winners and their scorers documented

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.