தொடர் – 32

ஹைக்கூவின் வகைமையான சென்ரியு வகை கவிதை குறித்து சென்ற தொடரில் பார்த்தோம். ஹைக்கூ எழுதும் பலருக்கும் அவ்வப்போது திடீரென ஒரு சந்தேகம் முளைப்பது வாடிக்கை. நாம் எழுதியிருப்பது ஹைக்கூவா… அல்லது சென்ரியுவா… என்று.

நகைச்சுவை, கிண்டல், கேலி, எள்ளல், பரிகசிப்பு, சீண்டல் என எழுதப்படும் வகை பெரும்பாலும் சென்ரியுவாகவே அமையும். அது மட்டுமல்லாது… சென்ரியுவிற்கும், ஹைக்கூவிற்கும் பொதுவான ஒரு வேறுபாடும் உண்டு. உங்களது கவிதை இரண்டு காட்சிகளையோ அல்லது அதற்கும் மேற்பட்ட காட்சிகளைக் கொண்டு அமைந்தால்… அது ஹைக்கூ..

அதை தவிர்த்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ சென்ரியுவிற்கான கிண்டல், கேலி, நகைச்சுவை உணர்வுடன் ஒரே பொருளை மட்டும் கவிதையில் சொல்லி நகர்ந்தால் அது சென்ரியு.

இதோ… இதை கவனியுங்கள்..

கூட்ட நெரிசல்
காணாமல் போகிறது
பிரதான சாலை..!

இது சென்ரியு. நேரடி ஒரே பொருள். கூடவே… நகைச்சுவை உணர்வை தரும் விதம்.

இதையே…

கூட்ட நெரிசல்
காணாமல் போகிறது
ஜல்லிக்கட்டுக் காளை..!

இது ஹைக்கூ. இங்கு முதலிரண்டு வரி வாசிக்கும் போது…

கூட்ட நெரிசல்
காணாமல் போகிறது..

ஏன்… எதற்கு என்ற, ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணும்…

ஈற்றடியோ..

ஜல்லிக்கட்டுக் காளை… எனும் போது

கூட்ட நெரிசல்

காணாமல் போவதற்கு.. காரணமாக ஜல்லிக்கட்டுக் காளை இருக்கிறது என்றும் நாம் காட்சிப் படுத்துகிறோம்.

வேறொரு காட்சியில்..

கூட்ட நெரிசலில்
காணாமல் போகிறது

ஜல்லிக்கட்டுக் காளை… என்று சொல்லும் போது… கூட்டத்தைக் கண்டு ஜல்லிக்கட்டு காளை மிரண்டு ஓடி… காணாமல் போகிறதோ என வேறு ஒரு சிந்தனையை நமக்கு உணர்த்தும்.

ஒரு ஹைக்கூவிற்குள் மாறுபட்ட கோணத்தில் இரு காட்சிகளும்..

சென்ரியுவாக இருப்பின் நேரடியாக ஒரே காட்சி சற்றே நகைச்சுவை, கிண்டல், கேலி..கலந்து இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.

இன்னும் வரும்..

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.