தொடர் – 34

சாயலும்… போலச்செய்தலும்..

இன்று முகநூல் ஹைக்கூ உலகில் அனைவரிடமும் உலவும் வார்த்தைகள் இவ்விரண்டும்.

சாயல் கவிதை என்பது. ஒருவர் எழுதிய கவிதையின் சாயலில் தெரிந்தோ… தெரியாமலோ வேறு ஒரு கவிஞர் அதே சிந்தனையில் கவிதை வடிப்பது… இங்கு

இந்நிகழ்வானது அறிந்தும் நடக்கலாம். அறியாமலும் நடக்கலாம். இதை தவறு எனக் கூறுவதற்கில்லை. ஏனெனில் ஒரு கவிஞன் காணும் காட்சியை வேறு ஒரு கவிஞன் காணமாட்டான் என எவ்வாறு எண்ணுதல் இயலும். அதுமட்டுமல்ல ஒருவரது சிந்தனை அடுத்தவருக்கும் வரும். என்பதும் ஏற்புடையதே..

இவ்விடத்தில் கவிஞர்களிடத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகளை கவனித்தாலே தெரிந்து விடும். ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்து உணர்ந்ததை கவிதையாகப் பதிவிட்டிருக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.

இந்த கவிதைகளை காணுங்கள்…

மேய்கின்ற மாட்டின் மேல்
ஒய்யாரமாய் ஒரு பயணம்.
வெள்ளை நாரை.

  • அனுராஜ்..

இது எனது கவிதை.

முகநூலில் பதிவிட்ட மறுதினம் ஒரு கவிஞர் எனது முகநூல் பக்கத்தில் வந்து.. ஐயா.. . நான் இது போல ஒன்று எழுதியிருக்கிறேன் என்றார். ஒரு மாத இதழுக்காக நான் பற்றியத்தில் ( மெசன்ஜர் ) எழுதி அனுப்பி வைத்த கவிதையை ஒத்து இருக்கிறது. ஆனால் நான் முகநூலில் பதிவிடவில்லை என்றார்.நான் அவரது கவிதையை பதிவிடக் கூறிய பின்.. அவர் பதிவிட்டது இக்கவிதை…

வெள்ளைக் கொக்கு
இடமாறிப் போகிறது
மாட்டின் மேல் அமர்ந்து.

  • குமார் சேகரன்.

சற்றேறக்குறைய ஒரே சிந்தனை இருவரது கவிதைக்குள்ளும். இங்கு நான் அவர் கவிதையைப் பார்த்து எழுதவில்லை. அவரது மெசன்ஜர். பகுதியை நான் எப்படி கவனிக்க இயலும். அவரே சொல்லிவிட்டார். நான் எங்கும் பதிவிட வில்லையென. இது தற்செயலாக நடந்த நிகழ்வு இருவருக்குள்ளும்.

கிராமப் புறங்களில் இது போன்று மாடுகள், ..எருமைகளின் மேல் கொக்கு..நாரை மற்றும் பறவைகள் அமர்ந்து செல்வது வாடிக்கையான நிகழ்வு தான்.

அவரது சிந்தனையே… எனக்குள்ளும் ..இது தவறும் ஆகாது..

இதே சிந்தனை…

கரிச்சான் குருவியின்
முதுகு சவாரியை ஏற்கிறது
செம்மறியாடு.

  • எஸ். நாகலிங்கம்.

இவ்வாறும் பிறப்பெடுக்கும்.. இதுவும் அது போன்ற ஒரு சாயல் தான் என்பதை மறுப்பதற்கில்லை.. எனவே…

சாயல் கவிதைகளை கண்ணுறும் போது கடந்து சென்று விடுவது நல்லது. தெரிந்து நடக்கிறது எனில், இங்கு நமது கவிதை வேறொரு உருவத்தில் மறுபிறவி எடுத்திருக்கும்.

இது.. நமது கவிதை அவர்களது உள்மனதைக் கவர்ந்துள்ளது என்பதே பொருள்.. தெரியாமல் நடக்கிறதெனில் ஒருவருக்கான சிந்தனை…

அடுத்தவருக்கும் வரலாம்..என்பதே..

இனி… அடுத்தது… போலச்செய்தல் (காப்பி).

போலச்செய்தல் என்பது அப்படியே நமது படைப்பை எந்த சொற்களையும் மாற்றாமல் எழுதி நமது பெயருக்கு பதிலாய் வேறொருவரின் பெயரை ( தன் ) பெயரை போட்டுக் கொள்ளுதல் ..போலச் செய்தல் என்பதாகும். இது முழுக்க முழுக்க ஒரு தவறான விசயம். அடுத்தவரின் கவிதையை திருடி தன் பெயரைப் போட்டுக் கொள்வதனால் இது உரிமைப் பிரச்சனையாகி விடுகிறது. இதனை வரவேற்பதோ, ஊக்கப்படுத்துவதோ தவறு. சம்பந்தபட்ட கவிஞர் அவ்வாறு நடப்பதை தவிர்ப்பதே நல்லது. அடுத்தவர் கவிதைக்கு நம் பெயரை போடுவதனால் நாம் பெரிய ஆளாகி விட முடியாது. அது மட்டுமல்ல கவிதை உலகில் தொடர்ந்து இரவல் குதிரையில் பயணிப்பது இயலாத ஒன்றே.

இங்கு கவனியுங்கள்…

விதவை பூவும் வைக்கிறாள்
பொட்டும் வைக்கிறாள்
கணவன் படத்துக்கு.

மேற்படி இந்த கவிதை 2015 லிருந்து 2018 வரை பலரால் பல பெயர்களில் உரிமை கொண்டாடப் பட்டுள்ளது. அதே சொற்கள்.. அதே வரிகள்.. அதே அடிகளில்.

இது அப்பட்டமான திருட்டு..யார் முதலில் திருடியது..? இதை வரவேற்பது தவறு.இது கண்டனத்திற்குரியது.

இன்று தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது என எண்ணிவிட வேண்டாம்.

ஜப்பானில்  மட்சுவோ பாஷோ காலத்திலேயே இது போல நடந்திருப்பதை அவரது கவிதை வாயிலாகவே அறியலாம்.

Don’t imitate me,
It’s as boring
As the two halves of melon.

  • Matsuo_Basho ( 1644 – 1694 )

என் போல் செய்யாதே
அதில் சுவாரஸ்யமில்லை
முலாம் பழப் பாதிகளைப் போல.

  • மட்சுவோ_பாஷோ

ஆக… இது ஒன்றும் புதிதல்ல. பதினாறாம் நூற்றாண்டிலேயே துவங்கி விட்ட ஒன்று…

கவிஞர்களின் செயலில் தான் உள்ளது..

சாயலும்..போலச் செய்தலும்..

இன்னும் வரும்…

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.