தொடர் – 35

ஹைக்கூவில் படிமம்

படிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம்..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை.

இப் படிமக் குறியீடுகளை குறிப்பிட்ட எல்லைக்குள் வகுத்துக் கொண்டு..அந்த சூழலுக்கும்..நிகழ்வுக்கும் ஏற்ப கவி அமைப்பது எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்..

படிம உத்தி முறையே துவக்கத்தில் ஹைக்கூவில் கையாளப்பட்டது. ஏனெனில் அது வாசகனை பல கோணத்தில் சிந்திக்க வைக்க பேருதவி புரியக் கூடியதாகும்.

ஜப்பானியக் கவிதைகளில்… அடிக்கடி காணப்படும் புத்தர், ப்ளம் மரங்கள், பட்டாம்பூச்சி, தவளை, சக்குரா மலர்கள், தேநீர் கோப்பைகள் கூட ஜப்பானிய கவிஞர்களுக்கு படிமங்களாக உறுதுணை புரிந்திருக்கின்றன.

ஒரு எளிய மனிதனுக்குத் தெரிந்த ஒன்றின் மீது தன் கருத்தினை ஏற்றிச் சொல்வதன் வாயிலாக கவிஞன் சொல்லும் கருத்து எளிதில் அனைவரையும் சென்றடைந்து விட, இந்த படிம உத்திமுறை ஹைக்கூவில் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டது.

ஆனால்… இதனை இன்று பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக நேரடியாகவே தங்கள் கருத்தினை பதிவு செய்து விடுகிறார்கள்.

ஹைக்கூ கருத்துப் பொருண்மையில் எழுபது அல்லது 80 சதவிகிதத்தை வெளிப்படுத்துவது நல்லது..அத்தகைய ஹைக்கூ மிகச்சிறப்பானது… என்கிறார் ஆர்தர் கிறிஸ்டி எனும் மேற்கத்திய ஹைக்கூ கட்டுரையாளர்.

ஹைக்கூவின் அமைப்புமுறை, எதனைச் சொல்லவேண்டுமோ அதனை எவ்வாறு வெளியிடவேண்டும் என்றாய்ந்து சொல்லுதல் நல்லது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.

என்ற திருவள்ளுவர் கூறிய நெறி ஹைக்கூவிற்கு சரியாக பொருந்தும்.

சிறந்த சொல்லாட்சியும், அழகியப் படிமத் தொடர்ச்சியும் ஹைக்கூவிற்கு அடிப்படை சொற்சிக்கனம்,பொருட்செறிவு இருத்தல் ஹைக்கூவில் அவசியம்.

இந்த ஹைக்கூக்களை கவனியுங்கள்..

காலைத் தேநீர் அருந்தும் துறவி
சாமந்திப்பூ மலர்வது போல
அமைதி.

  • மட்சுவோ பாஷோ (1644 – 1694)

ஒரு துறவி தேநீர் அருந்துவது மலர் மலரும் நிலை போன்றது. அவ்வளவு மென்மை.

ஆர்வமுள்ள ஈயே
உன்னை புத்தராக்குகிறேன்
எனது கைத்திறத்தால்..!

மலர்வதில் அதிக ஆர்வம்
கொள்ளவில்லை
எனது பிளம் மரம்.

  • இஸ்ஸா (1763 – 1827 )

இரண்டு பிளம் மரங்கள்
நான் விரும்புவேன் அவை மலர்வதை
ஒன்று விரைவில்… இன்னொன்று பிறகு.

தேநீர்ப் பூக்கள்
அவை வெள்ளையா..?
மஞ்சள் நிறமா..?

  • யோஸா பூசன் (1716 – 1784)

வாசிக்கும் போது தெரியும் படிம உத்தியை கையாண்டிருக்கும் விதம்.

தமிழிலும் இந்த உத்தியை கையாண்டனர் முன்னர்.

இதை கவனியுங்கள்..

விடுதலைப் போராட்ட
தியாகி வீட்டில்
கூண்டில் கிளி.

  • நெல்லை.சிவபுத்திரன்

இதில் கூண்டில் கிளி படிமம் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இன்னும் வரும்.. 

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.