தொடர் 25.

அசைபிரித்தல்

ஹைக்கூ ஜப்பானில் பிறந்த ஒரு கவிதை வடிவம் என்பதையும், அதனை அங்கு மரபு மீறாமல் எழுதுகிறார்கள் எனவும், ஜப்பானிய ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையெனக் கொள்ளப் படுகிறது என்றும்.. 5 – 7 – 5 என்ற அசையமைப்பில் ஜப்பானிய ஹைக்கூ எழுதப் படுகிறது என்பதையும் இதற்கு முன் கண்டுள்ளோம். தமிழில் ஹைக்கூவிற்கு அசைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு விட்டது. அசை எண்ணிக்கை வைத்து ஹைக்கூ படைக்க அவசியமில்லை.

இருப்பினும்… அசை கட்டுப்பாடோடு ஒரு ஹைக்கூவை எவ்வாறு வடிவமைப்பது என்பதையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. அதைப்பற்றி இங்கு காண்போம்.

துவக்கத்தில், பலரும் ஜப்பானிய எழுத்துமுறை போல, ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு அசையாக பிரித்து தமிழில் ஹைக்கூவை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது தவறு.

தமிழ் கவிதை மரபில் உள்ளதைப் போல நேரசை..நிரையசை கணக்கில் தான் பிரித்தல் வேண்டும்.

குறில் தனித்தும், குறிலுடன் ஒற்றும்
நெடில் தனித்தும், நெடிலுடன் ஒற்றும்
வருவது நேரசை

எ.கா….

க. (குறில்)
கல் (குறில் + ஒற்று)

கா. (நெடில்)
கால் (நெடில் + ஒற்று)

இரு குறில் இணைந்தும், அதனுடன் ஒற்று இணைந்தும் அல்லது குறிலுடன் தொடர்ந்து நெடில் வந்தும் அதனுடன் இணைந்து ஒற்று வந்தாலும் அது நிரையசை.

எ.கா….

வர (இரு குறில்)
வரம் (இரு குறில் + ஒற்று)

படா (குறில் + நெடில்)
படார் (குறில் + நெடில் + ஒற்று)

நீங்கள் கவனிக்க வேண்டியவை

  1. குறில் முதலில் வரும் போது அதனை தனித்து குறித்து அலகிட கூடாது. அடுத்துள்ள ஒற்றுடன் அல்லது நெடிலுடன் இணைத்து அலகிட வேண்டும்.
  2. குறில் தனித்து வருவது ஒரு சொல்லின் றுதியிலும்..இடையிலும் மட்டுமே நிகழும்.
  3. ஒற்றெழுத்தை தனித்து அலகிட கூடாது. குறிலுடனோ.. நெடிலுடனோ இணைத்து அலகிட வேண்டும்.. இரு ஒற்று எழுத்து வந்தாலும் முன்னுள்ள குறிலிடனோ, நெடிலுடனோ இணைத்தே அலகிடுதல் வேண்டும்.
  4. இரு நெடில்களை ஒன்றாக அலகிட இயலாது. தனித்தனியே நேர்..நேர் என அலகிடுதல் வேண்டும்.

இப்போது இந்த ஹைக்கூவை கவனியுங்கள்..

காற்/றே/ திசை/ திரும்/பு/… 5
நேர்/நேர்/ நிரை/ நிரை/நேர்

இங்/கே/ ஒடிந்/துவி/ழும்/நிலை/யில்/… 7
நேர்/நேர்/ நிரை/நிரை/நேர்/நிரை/நேர்.

பட/ரும்/ கொடி/யொன்/று… 5
நிரை/நேர்/ நிரை/நேர்/நேர்.

இவ்வாறாக தான் அலகிட வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ளவே இது. அசைக் கட்டுப்பாடு இன்று ஹைக்கூவில் மேற்கொள்ளப் படுவதில்லை என்பதனால், இது உங்களின் தெளிவிற்காக மட்டுமே.

இன்னும் வரும்…

 முன்தொடர் 24


1 Comment

casino en ligne francais · மே 28, 2025 at 10 h 32 min

Very well voiced really. !
casino en ligne francais
Nicely put. Appreciate it.
casino en ligne francais
You reported this perfectly.
casino en ligne fiable
Regards. Ample stuff!
casino en ligne
You suggested that really well!
casino en ligne fiable
Kudos. Numerous information.
casino en ligne fiable
Lovely content, Cheers!
casino en ligne
You revealed it fantastically!
meilleur casino en ligne
With thanks, I like it.
meilleur casino en ligne
Amazing a good deal of great knowledge.
casino en ligne France

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.