தொடர் 21.

ஹைக்கூவில் மகளிரின் பங்கு.

தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும், சிறப்பான பல கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது.

1987 ல் டாக்டர் தி.லீலாவதி என்பவர் ஜப்பானிய மொழிபெயர்ப்பு ஹைக்கூ நூல் ஒன்றை வெளியிட்டார். இதுவே பெண் ஒருவரின் ஹைக்கூ பங்கெடுப்பு..

இதன் பின், 1990 ல் முதுமுனைவர் மித்ரா அம்மையார் நேரடி தமிழ் ஹைக்கூ நூலை வெளியிட்டார். அதே ஆண்டில் டாக்டர்.தி.லீலாவதி அவர்கள் “இதுதான் ஹைக்கூ” என்ற ஹைக்கூ குறித்த கட்டுரை நூலினை வெளியிட்டார். இது 1949 இல் ஆங்கில ஹைக்கூ கட்டுரை மற்றும் ஆய்வாளரான ஆர்.எச்.பிளித்தின் ஆய்வு நூலின் மொழிபெயர்ப்பு என்போரும் உண்டு. இதனை டாக்டர்.தி.லீலாவதி மறுக்கவும் செய்தார். அதன்பின்.. 1997 ல் கவிஞர்.நிர்மலா சுரேஷ் “ஹைக்கூ கவிதைகள்” எனும் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார்.. பொதுவில் 1990 க்கு பிறகே பெண்கள் ஹைக்கூவில் காலூன்றத் துவங்கினார்கள் எனலாம்.

  •  பரிமளமுத்து “மழைத் தூறல்கள்” தொகுப்பு*
  •  பாலரஞ்சனி சர்மா “மனசின் பிடிக்குள்” தொகுப்பு
  •  மித்ரா “மித்ராவின் ஹைக்கூக்கள்”
  •  விஜயலட்சுமி மாசிலாமணி “மூக்குத்தி பூக்கள்”
  •  மரியதெரசா “துளிப்பா தோப்பு”
  •  கு.அ.தமிழ்மொழி
  •  க.காயத்ரி
  •  புதுவை கு.தேன்மொழி
  •  ரேவதி இளையபாரதி
  •  ஓவியம் தமிழ்ச்செல்வி
  •  விக்னா பாக்கியநாதன்
  •  பரிமளம் சுந்தர்
  •  சுவாதி
  •  இ.பரிமளம்,

இவர்களைத் தொடர்ந்து, இன்றும்… பல பெண் கவிஞர்கள் மிகச் சிறப்பாகவே ஹைக்கூவை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூல் வெளியீடும் செய்திருக்கிறார்கள்.

உங்களின் பார்வைக்கு சில பெண் கவிஞர்களின் ஹைக்கூக்கள்.

தேவர்கள் தெரியாமல்
குடிக்கும் சுருட்டு
விண்மீன்கள்.
– கவிஞர்.சுவாதி (காற்று சொன்ன ஹைக்கூ 1997)

வானத்தில் ராக்கெட்
வட்டமிடும் இன்சாட் இங்கு
வயல்வெளிகளில் பவர்கட்.
– பரிமளமுத்து (இலையுதிர்காலம் நிரந்தரமல்ல)

காடுகள் அழிந்தன
பட்ட மரமெங்கும் பறவைகள்
இரங்கல் கூட்டம்.
– கவிஞர்.மித்ரா (கிண்ணம் நிறைய ஹைக்கூ..1995)

நன்றி மீண்டும் வருக
பயமாய் இருந்தது
அரசு மருத்துவமனை.
– பாலபாரதி. (இதயத்தில் இன்னும்..தொகுப்பு)

மரமிழந்த
குயில்
காடழிப்பு.
– க.காயத்ரி

சுறுசுறுப்பான
தேசிய விளையாட்டு
தேர்தல்.

சோம்பேறி நாட்டில்
சுதந்திர தினம்
விடுமுறை நாள்.
– இ.பரிமளம்

தலைமுறைக் கோபம்
அடி விழ..அடி விழ..
அதிரும் பறை.
– மித்ரா

சேலையைத் தெரியும்
யாருக்கும் தெரிவதில்லை
உசிரு + மனசு = பெண்.
– கு.தேன்மொழி

தாய்ப்பால்
நஞ்சாகிறது
கள்ளிப்பால்.
– கு.அ.தமிழ்மொழி. (சிறகின் கீழ் வானம்)

துவக்கத்தில் ஹைக்கூவிற்கும், சென்ரியுவிற்கும் வித்தியாசம் தெரியாமலேயே படைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பாரும் உண்டு. அது உண்மையும் கூட. இங்கு நான் மேற்கோள் காட்டிய பலவும் சென்ரியுக்களே..

அடுத்து இன்னும் சில பெண் கவிஞர்களது படைப்புகளை காண்போம்.

   இன்னும் வரும்…

 முன்தொடர் 20


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.