தொடர் 19

ஈற்றடி சிறப்பு

 

ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..

ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது. இதை பலமுறை வலியுறுத்துகிறோம்..

ஏனெனில் அவ்வாறு எழுதும் போது அது ஹைக்கூவின் அழகை கெடுத்து விடும்.

இதை கவனியுங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு கவிஞர் எழுதி நான் படித்த ஒரு கவிதை இது..

அப்பாவின் அறிவுரை
மிகவும் கசப்பாக இருக்கிறது
பாகற்காய்..!

இதில் ஈற்றடியும் பொருந்தவில்லை. முரண்பட்டும் அமைந்திருக்கிறது. அறிவுரைக்கும், பாகற்காய்க்கும் என்ன சம்பந்தம் உள்ளது ? ஒரு வேளை அறிவுரை பாகற்காயைப் போல கசப்பானது எனச் சொல்ல வருகிறார் கவிஞர் என எண்ணத் தோன்றுகிறது.

ஹைக்கூவில்… முதல் அடியோடு பொருந்தியதாக இரண்டாம் அடியும், ஈற்றடி இவ்விரண்டு அடிகளோடு இணைந்ததாகவும், பொருந்துவதாகவும் அமைதல் வேண்டும். முரண்பட்டு ஈற்றடி தனியாக நிற்கக் கூடாது.

கவிதையை எழுதியதும் படித்துப் பாருங்கள். ஹைக்கூ என்பது செய்தியல்ல. ஒரு காட்சிப் பதிவு. நீங்கள் எழுதிய ஹைக்கூவை வாசித்து முடிக்கையில் அது ஒரு காட்சியாக வாசகன் மனதில் விரிய வேண்டும்.

கீழேயுள்ள நமது கவிஞர்களின் கவிதைகளை கவனியுங்கள்..

பனிப்பொழிவிற்கு தப்பிய
இலையின் அடிபாகத்தை
ஈரமாக்கியவாறே அந்திமழை.

  • முனைவர் V.புகழேந்தி.

உதிரவே இல்லை
இறந்துகிடந்த வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள்.

  • வதிலை பிரபா

மரங்கள் வெட்டப்பட்டு
புதிதாய் நடப்பட்டது
அலைபேசி கோபுரம்.

  • நாகை ஆசைத்தம்பி

வெயிலைத் துரத்த
குடையை விரிக்கிறேன்
சிக்கியது நிழல்.

  • ஐ.தர்மசிங்

தோட்டத்தில் பூச்செடிகள்
நிரம்பியிருக்கும்
வீட்டினுள் நறுமணம்.

  • மாதவன்.

யார் பதித்த கால்தடமோ
பறவைகளின் தாகம் தீர்க்கிறது
மழைநாட்கள்..!

  • ஆ.உமாபதி

இந்தக் கவிதைகள் நிச்சயம் வாசித்து முடிந்ததும்..உங்கள் எண்ணத்தில் காட்சியாய் விரியும் என்பதில் ஐயமில்லை..

ஹைக்கூ காட்சியாய் விரிவதோடு பலவித எண்ணங்களையும் வாசகனிடத்தில் விதைக்க வேண்டும்.

இன்னும் வரும்.. 

 முன்தொடர் 18


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.