பாடல் – 15

பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் – ஊழினால
ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா;
நட்கப் படாஅ தவர்.

(இ-ள்.) பொய் – பொய்ச் சொற்களை, வழங்கி – பேசி, வாழும் – (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் – திருவில்லாதவனும், கை – முறைமை, திரிந்து – வேறுபட்டு, தாழ்வு இடத்து – (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் – (அவனைத் தனக்கு) நேராக, கருதும் – நினைக்கின்ற, தட்டையும் – மூங்கில் போலும் (புரைபட்ட) மனத்தவனும், ஊழினால் – (ஒருவனைச் சேரவேண்டிய) முறையினால், ஒட்டி – சேர்ந்து, வினை – (அவன்) காரியத்திலே, நலம் (தனக்குப்) பயன், பார்ப்பானும் – பார்க்கின்றவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், நட்க – (யாவராலும்) நட்புக் கொள்ள, படாஅதவர் – தகாதவர்; (எ-று.)

(க-ரை.) “பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிடையாது” என்றபடி பொய் சொல்பவனிடம் செல்வம் நிலையாது; தனக்கு மேம்பட்டவன் ஏதாவது காரணத்தால் தாழ்வடைந்த காலத்தும், அவனைத் தனக்கு மேலானவனாகவே கருதவேண்டும்; நட்புச் செய்யப்பட்டவனிடமிருந்து தனக்கு என்ன பயனுண்டாமென்று எதிர்பார்த்தல் தகாதது.

பொறி – இலக்குமி; இங்குச் செல்வத்தைக் குறித்தது – அறை – அறுதலையுடையவன், ஐ : கருத்தாப் பொருள் விகுதி, இனிப் பொறி அறை என்பதற்கு அறிவற்றவன் என்றும் பொருள் கூறலாம். கை – ஒழுக்கம். தட்டை – மூங்கில்; மேலோரை வணங்காமையால் தட்டை என அஃறிணைப் பொருளாகக் கூறப்பட்டது; உவமையாகு பெயர். ஊழ்-முறைமை. நட்கப்படாதவர் : வினையாலணையும் பெயர்; நள் : பகுதி, கு : சாரியை, ப் : சந்தி, படு : செயப்பாட்டு வினைப் பொருள் விகுதி, உகரக்கேடும், ளகரத்திரிபும் சந்தி. நட்கப்படு என்ற பகுதியுடன் ஆ : எதிர்மறை விகுதி, த் : விரித்தல் விகாரம், அ : சாரியை, வ் : சந்தி, அர் : பலர்பால் விகுதி, பொறியறை, தட்டை என்ற இரண்டும் உயர்திணைச் சிறப்புப் பெயராகிய பார்ப்பான் என்பதோடு விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபேற்றன : படாஅதவர் : இசைநிறை அளபெடை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »