பாடல் – 13

சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.

(இ-ள்.) சீலம் – (பிறர்) குணத்தை, அறிவான் – அறிந்து நடக்கிறவன், இளம் கிளை – இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால – மிகவும், குடி – குடிகளை, ஓம்பல் – பேணுதலில், வல்லான் – வல்லவன், அரசன் – அரசனாவான், வடுஇன்றி – குற்றம் இல்லாமல், மாண்ட – மாட்சிமைப்பட்ட, குணத்தான் – குணத்தையுடையவன், தவசி – தவசியாவான், என்ற – என்று சொல்லப்பட்ட, இ மூவர் – இம் மூவரும், யாண்டும் – எவ்விடத்தும், பெறற்கு – பெறுதற்கு, அரியார் – அரியராவார்; (எ-று.)

(க-ரை.) பிறர் குணம் அறிந்து நடக்கவல்ல சுற்றத் தானும், குடிகளைக் காக்கவல்ல அரசனும், குற்றமில்லாது துறவோடிருக்கவல்ல தவசியும் எல்லாராலும் தேடிப் பெற வேண்டுபவராவர்.

இளங்கிளை – புத்திரனாவான் என்பதுமுண்டு. இளமையாகியகிளை : பண்புத்தொகை. இளமை என்பதற்கு இளமை தொட்டு வந்த என இலக்கணையாற் பொருள் கொள்ளப்பட்டது; கிளை – சுற்றத்தார்க்கு உவமையாகுபெயர். சால : உரிச்சொல்; மிகுதி யென்னும் பொருட்டு. குடியோம்பல் – தளர்ந்த குடிகளைப் பேணல். அஃதாவது ஆறிலொன்றாகிய இறைப் பொருளையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். மாண்ட மாண், பகுதி; மாண்ட : பெயரெச்சம். தவசி : காரணப் பெயர். தவசு : பகுதி. தவமாவது – மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்கல் முதலாயின. அரியார் என்பதில் அருமை என்னும் பகுதி இன்மை யென்னும் பொருட்டு.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »