நூல்

பாடல் – 01

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.

(பொருள்) :

அருந்ததி – அருந்ததி போலும், கற்பினார் – கற்பையுடைய மகளிரது, தோளும் – தோள்களும், திருந்திய – குற்றமற்ற, தொல் – பழமையான, குடியில் – குடிப்பிறப்பில் (தோன்றி), மாண்டார் – மாட்சிமையடைந்தவரோடு, தொடர்ச்சியும் – கொள்ளும் நட்பும், சொல்லின் – சொற்களினுடத்தே, அரில் – குற்றங்களை, அகற்றும் – நீக்கவல்ல, கேள்வியார் – கேள்வியையுடையவரோடு, நட்பும் – செய்யப்படும் நட்பும், இம்மூன்றும் – இந்த மூன்றும், திரிகடுகம் போலும் – (ஒருவனுக்கு) திரிகடுகம் போன்றுள்ள, மருந்து – மருந்துகளாம்;

(கருத்துரை) :

நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது முதலிய மூன்றும் இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக்கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்துபோலும் என்பது.

“திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி முதலிய மூன்றும் இல்வாழ்வானொருவனுக்குத் துன்பம் அகற்றி இன்பம் விளைத்தலால், அவை உவமைகளாயின, இம்முதற்பாட்டிற் கூறப்பட்ட ‘திரிகடுகம்’ என்ற சொல்லே சிறப்பு நோக்கி இந்நூலுக்குப் பெயராகக் கொள்ளப்பட்டது; உவமையாகு பெயர்.

அருந்ததி – எழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி கற்புடையார், பலரினும் இவர்க்கு உயர்வு எங்ஙனம் எனில், விண்மீன் நிலையிலும், எழுமுனி வட்டம் என்ற நாட்கூட்டம் முன்பக்கம் அடியில் இருக்கும் மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிட்ட மீனொடு துணையாய் மின்னுவது. மாண்டார் – சிறந்தார், மாண் – முதனிலை உரிச்சொல். அரில் – ஐயந்திரிபுகள், சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் என்ற தொடரிலுள்ள பொருளோடு ‘நுணங்கிய கேள்விய ரல்லார்’ என்ற குறளின் கருத்தை ஒப்பு நோக்குக.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »