பாடல் – 02

தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில்.

(பொருள்):

தன் குணம் – தனது (குடிப்பிறப்பின்) குணம், குன்றா – குன்றாமைக்கு (ஏதுவாகிய), தகைமையும் – ஒழுக்கமும், தா இல் – அழிதல் இல்லாத, சீர் – பெரும் புகழைதருகின்ற, இன் குணத்தார் – இனிய குணத்தையுடையோர், ஏவின – ஏவிய தொழில்களை, செய்தலும் – செய்வதும், நன்கு – அறத்தினியல்பை, உணர்வு – (அறியும்) அறிவையுடைய, நான்மைறையாளர் – நான்கு வகைப்பட்ட வேதங்களை ஓதிய வேதியர், வழி – (கூறிய) வழியில், செலவும் – நடத்தலும், இம்மூன்றும் – ஆகிய இம்மூன்றும், மேல் முறையாளர் – மேன்மையாகி ஒழுக்கத்தை ஆளுதல் உடையாரது, தொழில் – தொழில்களாம்;

(கருத்து):

தன்குலச் சிறப்புக் கெடாத வண்ணம் ஒழுகுதலும், குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தலும், நான்மறையாளர் சொல்லும் வழி நிற்றலும் மேலோர் செய்கை.

குன்றா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், தகைமை – பெருமையுமாம் , தாவில் என்பதைத் தாவு + இல் என்றும் பிரிக்கலாம். இங்கு தா என்னும் முதல் நிலையே உகரச்சாரியை பெற்றுத் தாவு என்றாயிற்று. தா+இல் என்னுமிடத்துத் தா – முதனிலைத் தொழிற் பெயர். நான்மறை – நான்கு மறை; நான்கு கூறுமாய் மறைந்த பொருள்களுமுடைமையால் நான்மறை என்றார். அவை பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும் ஆகும். இவற்றை இக்காலத்தவர் ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பர்.

முன் பக்கம் செல்லதொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »