ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15

தொடர் 15 ஹைக்கூவில் ஜென்.. ஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி…  புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை. மாறாக தன் குருவின் முகத்தில் குத்துவிடுவதையும், ஏன் உதைப்பதையும் கூட சிநேக இயல்பாகக் கொண்டது. மலையுச்சி ஒன்றில் KEI ZEN JOKIN என்பவர் ஜென் பௌத்தம், சிண்டோயிசம், தாவோயிசம், கன்பியூஸனிச சாரங்கள் (SHUGENDO) இவற்றினை தொகுத்தும், Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14

தொடர் 14 ஹைக்கூவில் தனித்த வார்த்தைகள் ஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம். தவறில்லை. இது குறித்து எந்த விதியும் வகுக்கப் படவுமில்லை. எங்கும் சொல்லப்படவுமில்லை. இணைப்பு வார்த்தைகள் சமயத்தில் சிந்தனையை விரிவு படுத்தவும். பல கோணத்தில் சிந்திக்க வைப்பதை போலவே தனித்த சொற்களும் சமயத்தில் வலிமையான கருத்தினைச் சொல்லும். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 13

தொடர் 13 ஹைக்கூவில் தன்மைப் பாங்கினைத் தவிர்க்கவும்.. ஹைக்கூவின் பண்புகளை குறித்து பேசும் போது கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் இதனை தெரியப்படுத்தி உள்ளார். சில மாதங்களுக்கு முன் ஒரு பேருந்து பயணத்தின் போது முகநூலை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஹைக்கூ போட்டி. அதில் ஹைக்கூவின் விதிமுறைகள் சொல்லப்பட்டிருந்தன. ஹைக்கூவின் விதிகள் பலவோடு மேற்சொன்ன விதிகளும் இடம் பெற்று இருந்தது. பின்னூட்டத்தில் இதை கவனித்த Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12

தொடர் 12 ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்.. நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்.. ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள். அதில் துவக்கப் பாடல் மட்டுமே ஹொக்கு.. ஏனையவை நாட்டு நடப்பை.. . உள்ள உணர்வை… Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11

தொடர் 11 கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான். ஒன்றை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவதோ, ஒன்றின் அழகை பன்மடங்கு உயர்த்திக் கூறுவதோ கற்பனையின் உச்சமாகிறது. ஆனால் ஹைக்கூவில் கற்பனைக்கு இடமில்லை என்கிறோம். ஆனாலும் துவக்கத்தில் ஹைக்கூவிலும் கற்பனை இல்லாமல் இல்லை. இந்த கவிதையை கவனியுங்கள்.. நிலவிற்கு ஒரு கைப்பிடி Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 10

தொடர் 10 வார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று. கவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன. அத்தகைய வார்த்தைகளை நாம் கவிதைகளில் கையாளும் போது கவனமாக கையாளுதல் அவசியம். ஒருமை, பன்மை வார்த்தைகளைக் கையாளும் போதும் வார்த்தைச் சொற்றொடர்களை அதற்கு தகுந்தாற்போலக் கையாள்வது முக்கியம். மாடு ஓடுகிறது…என்பது சரி மாடுகள் ஓடுகிறது… என்பது தவறு. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 09

தொடர் 09 ஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும். எந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் அக்கவிதையின் பொருளானது மாறாமல் இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட வார்த்தையை நீங்கள் தாராளமாக நீக்கி விடலாம். இரவில் பெய்யும் மழை விடியும் வரை தொடர்கிறது மின்சாரத் தடை. இந்த ஹைக்கூவில் ”பெய்யும்” என்ற Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 08

தொடர் 08 கவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது. வார்த்தைகளிலும் சிக்கனம் தேவை.  அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும். ஆனால் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பியல்புகளே இது தான். இதில் ஹைக்கூ கவிதைக்கான வடிவமைப்பு மூன்றடி என பார்த்தோம். ஆனால் ஜப்பானில் ஹைக்கூ மூன்றடியாக இருக்கும் என்பதில் உறுதியில்லை. ஏற்கனவே நாம் கண்டுள்ளோம் ஜப்பானிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 07

தொடர் 07 மராட்டிய வீரன் சிவாஜியைப் பற்றி படிக்கும் போது இந்த கதையையும் நீங்கள் படித்திருக்கலாம். ஒருநாள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்த சிவாஜி, இரவு வேளையில் மழையில் சிக்கிக் கொள்ள அந்த கிராமத்தில் இருந்த ஒரு கிழவியின் இல்லத்தில் ஒதுங்க நேரிடுகிறது. கிழவி அன்போடு அவனை வரவேற்றதோடு அன்றைய இரவை அங்கு கழித்துச் செல்ல அனுமதி தருகிறாள். கூடவே தான் தயாரித்த சூடான கோதுமைக் களியினை உண்ணவும் தருகிறாள். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 06

தொடர் 06 கவிஞனை மட்டுமின்றி வாசகனையும் கவர்ந்திழுக்கும் ஒரு கவிதை வடிவம். கவிஞனின் எண்ண ஓட்டங்களோடு வாசகனின் எண்ண ஓட்டங்களையும் உறவாட வைக்கும் ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ. வாசிக்க கூடிய ஒவ்வொரு முறையும் பல கோணங்களைக் காட்டி நகரும் அற்புத ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு. இத்தகைய ஆற்றலை கொண்டிருப்பதனால்தான் ஜப்பானில் தோன்றிய இந்த கவிதை வடிவம் மேற்கத்திய நாடுகளில் பெரும் புகழை எளிதில் பெற்று விட்டதெனலாம். இந்தியாவில் காலம் Read more