தொடர் 12

ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..

நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..

ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள். அதில் துவக்கப் பாடல் மட்டுமே ஹொக்கு.. ஏனையவை நாட்டு நடப்பை.. . உள்ள உணர்வை… சமுதாயச் சிந்தனையை… பாடும் வகையில் அமைந்தவையே.

ஹொக்குவை தனியாக ஹைக்கூ எனும் பதத்தில் பிரபலமாக்கிய பெருமை மாஸ ஒகா ஷிகி (1867-1902) இவரையே சேரும்..ஹைக்கூவில் கற்பனையை தவிர்க்கச் சொன்னவரும் இவரே. நேராகப் பார்த்த சம்பவங்களையும்..பொருட்களையும் மட்டுமே கவிதையில் காட்டுங்கள்..உங்களது மனதில் எழும் கருத்துக்களை ஹைக்கூவில் ஏற்றிச் சொல்லாதீர்கள். அது ஹைக்கூவின் உண்மைத் தன்மையை சிதைத்து விடும் என்றவர் ஷிகி. அவரது கவிதையை காணுங்கள்..

துல்லிய தினத்தில்
எதனுடைய புகையோ
வானில் செல்கிறது.

எவ்வித ஒப்பனையுமின்றி..தெளிவாக சொல்லும் கவிதையிது.

கோடை நதி
பாலம் இருந்தும்
குதிரை நீரில் நடக்கிறது.

கோடை காலத்தில் உடலெங்கும் அனலின் தாக்கமாய் இருக்கலாம்..ஓடக்கூடிய நதி கூட பெரு நதியாய் இல்லாமல் ஓடைபோல வழிந்தோடலாம்..வெகு தூரம் பயணிக்கும் குதிரை தனது உடல் வெப்பத்தை போக்கிக் கொள்ள பாலமிருந்தும்…  பாலத்தின் மீது போகாமல் அச்சிறு நதியில் இறங்கிச் செல்கிறது என காட்சிபடுத்துகிறார்..

இதை கவனியுங்கள்…

பனியின் ஊடே
ஓடம் செலுத்தி வெளிவர
அகன்ற கடல்..!

இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்தபின்னே
காய்மரம் பூத்துள்ளது.

இவையனைத்தும் ஷிகியின் கவிதைகளே..பார்க்கும் போதே தெரிந்திருக்கும்…பார்வையில் பட்டதை.. உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் பாங்கு… இவர் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கக் கால கவிஞர் என்பதனால்..இவரது கருத்து மேற்கத்திய கவிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது..அது மட்டுமல்லாது ஜப்பானிய ஹைக்கூ அமைப்பும் (Japan Hyhoo Federation) ஹைக்கூவில் கற்பனையை தவிர்ப்பதன் வாயிலாக ஒரு புதிய கவிதை வடிவத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என இவரது கருத்தினை வரவேற்றது..ஆனாலும்…

ஒரு கவிதையை கற்பனையின்றி சொல்ல முடியாது என்று நம்பும் மேற்கத்திய கவிஞர்கள் சிலரும்..ஜப்பானிய கவிஞர்கள் பலரும் கற்பனையையும் அவ்வப்போது கலந்தே கவிதை படைத்து கொண்டிருந்தார்கள்..அது ஹைக்கூ எங்கெங்கு பரவலாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் கற்பனையும் அவ்வப்போது தலைகாட்டுவது ஹைக்கூவில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.

இன்னும் வரும்… 

 முன் தொடர் 11


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.