தொடர் 10

வார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று.

கவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன. அத்தகைய வார்த்தைகளை நாம் கவிதைகளில் கையாளும் போது கவனமாக கையாளுதல் அவசியம். ஒருமை, பன்மை வார்த்தைகளைக் கையாளும் போதும் வார்த்தைச் சொற்றொடர்களை அதற்கு தகுந்தாற்போலக் கையாள்வது முக்கியம்.

மாடு ஓடுகிறது…என்பது சரி

மாடுகள் ஓடுகிறது… என்பது தவறு.

இங்கு மாடுகள் என பன்மையில் இருப்பதனால் வினைச்சொல்லும் பன்மையில் அமைதல் வேண்டும்.

மாடுகள் ஓடுகின்றன என வார்த்தை அமைய வேண்டும்.

அதே போல. ஒரே பொருளைத் தருவது போலத் தோன்றினாலும்.. சில வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் கவனமாய் இருத்தல் நல்லது.

ஒரு திருமண வீட்டில் அனைவரும் உண்ட பின்  மீதமான உணவினை ஒரு அனாதை விடுதிக்கோ, ஒரு பிச்சைக்காரனுக்கோ தருவதாக இருந்தால்… அங்கு,

எஞ்சிய உணவு என்றோ அல்லது மீதமான உணவு என்றோ தான் வரவேண்டும்..அதை விடுத்து வீணான உணவு எனும் வார்த்தை வருமாயின் அது தவறானப் பொருளாகி விடும். உண்ணத் தகுதியில்லாத ஒன்றை தான் வீணான உணவு என்போம்.

ஹைக்கூவில்… தேவையற்ற வார்த்தைகளும் பிரயோகிக்கத் தேவையில்லை. ஒரு வார்த்தையை நீக்கம் செய்தாலும் அதன் பொருளானது மாறுபடாதெனில் தேவையற்ற அந்த வார்த்தையை நீக்கம் செய்து விட வேண்டும்.

பலத்த மழை
வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது
ஒழுகுமிடத்தில் பாத்திரம்.

இந்த கவிதையில் வேகமாக என்ற வார்த்தை தேவையில்லை.

பலத்த மழை
நிரம்பிக் கொண்டிருக்கிறது
ஒழுகுமிடத்தில் பாத்திரம்.

என்றிருந்தாலே போதுமானது. எனவே எழுதும் போது தேவையற்ற வார்த்தைகளை நீக்கம் செய்தும்… ஒருமை, பன்மைக்கு உகந்த வார்த்தைகளை பிரயோகம் செய்தும் ஹைக்கூ எழுதினால் சிறக்கும்.

அடுத்துஹை க்கூவில் கற்பனை..

இன்னும் வரும்…

சென்ற முன் பகுதி தொடர் 09 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.