தொடர் 15

ஹைக்கூவில் ஜென்..

ஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி…  புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை. மாறாக தன் குருவின் முகத்தில் குத்துவிடுவதையும், ஏன் உதைப்பதையும் கூட சிநேக இயல்பாகக் கொண்டது. மலையுச்சி ஒன்றில் KEI ZEN JOKIN என்பவர் ஜென் பௌத்தம், சிண்டோயிசம், தாவோயிசம், கன்பியூஸனிச சாரங்கள் (SHUGENDO) இவற்றினை தொகுத்தும், மலைத் துறவிகளின், பொதுமக்களின் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை தொகுத்தும், இணைத்தும் ஜென் பாரம்பரியத்தை (SOTTO) புனரமைத்தார். இத்தகைய மாற்றங்களுக்குப் பின்…

ஜென் என்பது, பௌத்தமல்ல எனும் சொற்றொடர் பிரசித்தமாகி விட்டது..

ஓஷோவின் கூற்றுப்படி.. தத்துவம் என்பது பார்ப்பது. ஜென் என்பதோ பங்கு கொள்வது. நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஞானத்தை தட்டி எழுப்புவதே ஜென். மாறாக எவரையும் ஞானியாக மாற்றுவது இல்லை. அதனை எவரும் இயற்கையாக உணர்தலே வேண்டும்.

பௌத்த மதத்தின் மூலம் ஜென். ஆனால் ஜென் மட்டுமே பௌத்தமல்ல.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்குமானது. அதில் மரம், செடி, கொடி, புழு, பூச்சி, விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்து உயிர்களும் அடங்கும். மனிதன் வாழ எந்தளவு உரிமையை எடுத்துக் கொள்கிறானோ, அந்தளவு உரிமையை அனைத்து உயிர்களுக்கும் தரப்பட வேண்டும் என்பதே ஜென்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் போதிதர்மர் வாயிலாக சீனாவில் பரவிய பௌத்தம் முதலில் தியான மார்க்கமாக சீனாவிலும்..பின் ஜப்பானிலும் பரவியது.

ஜென்னை நாம் இந்துமத தத்துவ மரபில் ஒப்பீடு செய்தால்…கர்மயோகம்,ஞானயோகம், பக்தியோகம் என்பதில் ஞானயோகமாக கொள்ளலாம். நீ உன்னை உனது ஆழ்மனத் தேடலின் வழியாக தேடி அடை என்பதே ஜென். வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென். தியானமல்ல. தியானம் போல் அமர்ந்து தியானிப்பதுமல்ல.

இங்கு ஒரு கதையை சொல்கிறேன். ஒரு ஜென் குரு தன்னிடமிருந்த பௌத்த கோட்பாடுகள் அடங்கிய மறைகளை தீயிலிட்டு எரிக்கத் துவங்கினார். உடனிருந்த சீடர்களோ பதறித் துடித்து ஐயா அவை நமது மதக் கோட்பாடு அடங்கிய மறைகளாயிற்றே. அதை ஏன் எரிக்கிறீர்கள் ? என்று பதட்டத்துடன் கேட்க.. . அவரோ சிரித்த படியே… நான் வீட்டை அடைந்துவிட்டேன். இனி எனக்கு வரைபடம் தேவையில்லை என்றாராம்..

ஆம், வாழும் முறையை அறிந்து கொண்டுவிட்டால் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமாகி விடுகிறதல்லவா ? அதுவே ஜென்.

விலகியிரு
உலகம் உன்னுடையதே
உனக்குள் ஒரு புத்தன்.

  • புனான்.. ஜப்பானிய ஜென் துறவி

விடைபெறும் இலை
ரகசியம் சொல்லிச் சென்றது
மரணத்துக் குரிய தான..

  • லிப்னானி

பாரதியின் கூற்றுப் படி.. கவிதை எழுதுபவன் கவியன்று… கவிதையே வாழ்க்கையாக உடையவன் எவனோ, வாழ்க்கையையே கவிதையாக செய்பவன் எவனோ அவனே கவி என்கிறார். அது போலே ஜென்..

ஹைக்கூவில் பொருளைத் தேடாதீர்கள். உங்களைத் தேடுங்கள். நிச்சயம் கிடைப்பீர்கள் என்றார் ஈரோடு தமிழன்பன். இது போன்ற தேடலே ஜென்.

மூதாதையர் விழா
பிறகு மரத்தின் சலசலப்பு
பூச்சியின் கீதமும் கூட..!

  • சோகெட்சு (பெண் ஜென் துறவி)

இந்த கவிதையை கவனியுங்கள். விழா என்றாலே, அங்கு மகிழ்ச்சியும், ஆட்டமும், பாட்டமும், களேபரமாய் தானிருக்கும். அத்தகையச் சூழலிலும்..மரத்தின் சலசலப்பையும்..

அங்கிருந்த தோட்டத்து மலர்களில் வந்தமர்ந்த பூச்சிகளின் ரீங்காரமிடும் கீதத்தையும் கூட விழாக்கால ஆரவாரத்தின் ஊடாக ஒருவரால் ஆழ்ந்து கவனித்து ரசிக்கவும் முடிகிறதெனில் அங்கே தான் பிறக்கிறது ஜென் எனும் நிலை.

ஜென்… இன்னும் தொடரும்..

இன்னும் வரும்..

 முன்தொடர் 14


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.