தொடர் 14

ஹைக்கூவில் தனித்த வார்த்தைகள்

ஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம். தவறில்லை. இது குறித்து எந்த விதியும் வகுக்கப் படவுமில்லை. எங்கும் சொல்லப்படவுமில்லை.

இணைப்பு வார்த்தைகள் சமயத்தில் சிந்தனையை விரிவு படுத்தவும். பல கோணத்தில் சிந்திக்க வைப்பதை போலவே தனித்த சொற்களும் சமயத்தில் வலிமையான கருத்தினைச் சொல்லும். இதை கவனியுங்கள்..

தேர்தல் வந்துவிட்டது
அலங்கார தேவதைகளாய்
சுவர்கள்..!

இது எனது கவிதை. ஈற்றடியில் ஒற்றைச் சொல் பிரயோகம் செய்துள்ளேன். இதை வாசித்த நண்பர் ஒருவர் ஈற்றடியில் இரு சொல் பிரயோகம் செய்யலாமே என்றார்.

ஆனால் கவனியுங்கள். சுவர்கள் எனச் சொல்லி நிறுத்தும் போது அங்கு அது வீட்டுச் சுவராக, அலுவலகச் சுவராக, பள்ளிச்சுவராக, கோவில், மசூதி, சர்ச் போன்ற ஏதோ ஒன்றின் சுவராக இருக்க வாய்ப்புள்ளது. நான் வீட்டுச் சுவர் என “இருசொல்” வருமாறு சொல்லி நிறுத்தினால்… வாசகனது எண்ணம் வீட்டுச் சுவரோடு முற்று பெற்று விடும் அபாயமுள்ளது. எனவே கவிதையில் கூட்டுச் சொல்லோ, தனிச் சொல்லோ, எதுவும் வரலாம். கவிதைக்கு எது தேவை என்பதை கவிஞன் உணர வேண்டும். எதை கவிதையில் பயன்படுத்தினால் பல கோணங்களாய் விரியுமோ… அதை அவ்விடத்தில் பயன் படுத்துவது நல்லது. ஆகவே எவரும் இதனை வலிந்து திணிக்க முயற்சிக்காதீர்கள்.

இங்குள்ள கவிதைகள்… ஒரு சொல் பிரயோகத்தில் வந்தவை. இன்னும் பலவும் உண்டு…

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்.

  • கவிக்கோ. அப்துல் ரகுமான். (பால்வீதி)

தூண்டிலில்
சிக்கி விட்டது மீன்
கலங்குகிறது குளம்.

  • ஓவியக் கவிஞர் அமுதபாரதி

இலைகளுக்குள்
மறையும் நிலா
அசையவேயில்லை மரக்கிளை..!

  • மு.முருகேஷ் (தலைகீழாகப் பார்க்கிறது வானம்)

நிசப்தம்
கற்களில் ஊறிவிட
பூச்சிகளின் சப்தம்.

  • மட்சுவோ பாஷோ (1644-1694)

வார்த்தை தனித்தும் இருக்கலாம். இணைந்தும் இருக்கலாம். கவிதைக்கு எது அழகோ, எது கவிதையை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறதோ அதை அங்கு கையாள்வதில் தவறில்லை.

அடுத்து ஹைக்கூவில் “ஜென்”

இன்னும் வரும்… 

 முன்தொடர் 13


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.