விதி

துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர் நன்றே விதியால் நலிந்தோம் என்றே! இன்பம் உற்றோர் ஏனோ விதியை எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை! மதியைக் கொண்டு வறுமை போக்கி சதியை வெல்லல் விதியின் செயலே! முன்னைப் பிறப்பில் முடித்த வினைகள் மண்ணில் ஆன்மா மீண்டும் மலர்ந்தால் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்! பாடி இனிமைப் படைக்கும் ஐயா நல்லார் புரிந்த நன்னெறி வினைகள்! பொல்லார் புரிந்த புன்மைச் செயலால் வாடிக் கிடப்பர் Read more

அப்பாவின் கையெழுத்து

வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
” கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு ”
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன்.

தமிழர் கூட்டம்

உலகம் எங்கும் படர்ந்த கூட்டம்
தமிழர் கூட்டம் – என்றும்
ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும்
புனிதக் கூட்டம்!

அண்டை, மேலை நாடு தோறும்
உழைக்கும் கூட்டம்! – என்றும்

அறிவோமே

பொன்னும் பொருளும் நிறைந்தாலும் போற்றும் அருளால் சிறந்தாலும் மின்னும் கல்வி இல்லாரை மேன்மை யாக எண்ணாரே! எண்ணும் எழுத்தும் கண்ணாகும் ஏனைக் கலைகள் பொன்னாகும்! மண்ணில் நன்றாய் வாழ்தற்கு வளரும் கல்வி பெறுவோமே! கல்வி அழகே அழகாகும் கற்க கற்க சுவையாகும்! செல்வத் துள்ளே அழியாத செல்வம் அதுவே! அறிவோமே!

சுடர்க தமிழ்நெஞ்சம்

பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!

உறவு வாசம்

ஆல்பத்தில் சிரிக்கும்
உறவு முகங்கள்
ஆபத்தில் உதவிகேட்க
அவசரமாய் இறுகும்

மருந்து தடவி
ஆறாத காயம்
தந்தையின்
கண்ணீர் துளிபட
காணாமல் போகும்

நட்பு வேண்டும்

மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு… குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு… காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு… வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு… முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு… நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை… தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்… துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்… மகிழ்ச்சியின் Read more

தமிழ்நெஞ்சம்

மானம் காக்கும் அறநெஞ்சம் – உலக
மனத்தைக் கவரும் அறநெஞ்சம்
ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் – நலம்
இயற்றும் கடமை கெடாநெஞ்சம்.

நீதி வகுத்த நன்நெஞ்சம் – சங்க
நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம்
ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் – வேறு
அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?