பாட்டெழுதும் பாவலன் கை
பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக் கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில் கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் , வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருப்பினும் வேலைதேடி என்கைதான் விருப்பம் காணும் . நாட்டுக்குள் நடக்கின்ற அநியா யங்கள் நாமறிந்த வேளையிலே எதிர்த்து எழுதி தோட்டாபோல் பாவலன்கை துரிதமாய் ; பகையோ தொகையாக வந்தாலும் Read more




