திரும்பி எடுக்க முடியா
உன் ப்ரியங்கள்
மனக்குகைக்குள் அமிழ்ந்து
விட்ட சந்தங்கள்..
காதல் இங்கு நம் மந்திரம்
விதி வரைந்ததோ நம் பந்தம்..
மனக்காயத்தை ஆற்றுகின்ற
மகிழ்வான பொழுதுகள்
நம் உறவின் சாட்சிகள்
என்றும் மாறாத காட்சிகள்..
நீயும் நானும் கலந்த நம் உறவு
பூர்வ ஜென்ம தொடர்
நீங்காத நேசம் ..
தாரிணி