60453மாறி கால இரவொன்றில்
பிரயத்தனமின்றி சுமக்கும்
மிகையான குளிரில்

அவள் நிர்மலமான
நொடிகளை ஒவ்வொன்றாய்
கடக்கும் போது

தனிமைத் தீர்க்க வந்த
இன்னொரு அவள்

கவிதைகள் பற்றிய
கோணங்களை வட்டங்களுக்குள்
அடக்குகிறாள்

சில்லரைத்தனமான
சொற் சேர்க்கை வெறும்
பேச்சுகள் என்றும்

அகராதி மறைத்த
செறிவான பதங்கள்
கொண்டு ஆழந்த
அர்த்தங்களாயும்
சிலேடைகளாயும்
மர்மங்களாயும்
சுருக்கியும் விரித்தும்
சுவாரசியமாகவும்

புனைவதன் சிறப்பை
விபரித்துக் கொண்டே

அவள் சொல்லும் கவிதையை
நான் எழுதிக்கொண்டிருந்தேன்

முடிவில் சிறந்த கவிக்கான
பட்டத்தை நான்
வாங்கிக் கொண்டிருக்க
இன்னொரு அவளான அவள்
எனக்குள் அடங்கி
குதூகலித்துக் கொண்டிருந்தாள்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...