தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால் மனிதா… நீ பேராசையெனும் தீக்குள் விரலை வைத்தால்… உன் மனம் நொந்துபோகும்… உன் விரல் வெந்துபோகும்! மனிதா… நீ காமவெறியெனும் தீக்குள் விரலை வைத்தால் உன் மனம் மிருகமாகிடும்… உன் விரல் நரகமாகிடும்! மனிதா… நீ மூடநம்பிக்கையெனும் தீக்குள் விரலை வைத்தால் உன் மனம் மடங்கிப்போகும்… உன் கரம் முடங்கிப்போகும்! மனிதா… நீ தீவிரமதவெறியென்னும் தீக்குள் விரலை வைத்தால் உன் மனம் மதம் பிடித்தாடும்… உன் Read more

பள்ளிக்கூடம்

கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம். கரும்பலகையில் கிறுக்கிய கையுடன், கண்சிமிட்டி பேசிய எழுத்து ! வாத்யாரின் பிறம்பை பார்த்து பின்னுக்கு தள்ளி பயந்த காலு, உயரம் கூடகூட அளவெடுத்து தச்ச சட்டைபோல, படிக்க படிக்க பாடங்களும் அறிவை ஒசத்த, வானை நோக்கி பறப்பதே, பள்ளிகூட வாழ்க்கை ! பணிவாய் பவ்யமாய் இன்பமாய் அமர்ந்த கூடம் !   இந்த, தேனீக்களாய் மொய்த்த கூட்டத்தில், சுவையோடு கூடிய நட்பு. மனங்களில் மகிழ்ச்சி வண்டுகளாய் Read more

நேசிப்பாய் வாசிப்பை!

வாசிப்பை நேசிப்பாய் வளமாக்கும் அது உன்னை! வார்த்தைகளில் சொல்ல வாராத இன்பத்தைத் தருமுனக்கு வாசிப்பு! அவரவரே அனுபவித்து உணர்கின்ற மகிழ்ச்சி அது! அனுபவித்துப் பார்! அதுவோர் புதிய சுகம்! வாசித்துப் பார் வாழ்வில் ஒரு திருப்பம் ஒரு மாற்றம் நீ பெறுவாய்! உள்ளம் அமைதி பெறும் ஆறுதல் நீ அடைவாய் மூளை சுறுசுறுப்பாய் இயங்கத் தொடங்கி விடும் வாசித்துப் பார்! நீயோர் புதிய உலகத்தில் சஞ்சரிப்பாய்! அது – நீ Read more

செய்யும் தொழிலே …

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம் என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது! என்னிதய ஓசைகளை காட்டிலும் தறியின் ஓசைகளையே நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்! தறிகள் ஆடும் போதுதான் எனக்குள் காதலும் நர்த்தனம் ஆடுகின்றன … இலைகளை கோர்க்கும் போதுதான் எனக்குள் வார்த்தைகள் கோர்வையைத் தேடுகின்றன … நாடா அங்கும் இங்கும் ஓடும் போதுதான் எனக்குள் வரிகள் தாண்டவம் ஆடுகின்றன … சட சட சட வென என் தறிகள்ஓடும் Read more

இரவின் ரசனை

“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”, இரவின் அமைதியில், நெடுந்தூரமாய் மூழ்கிடவே, ஆசைப்படுகிறேன். எனை அணைக்க வந்த இரவு, என் உடலை தட்டித் தாலாட்டுவதை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு இரவும் தனித்தனி ருசிதான். பருகிப்பார் … அமிர்தம் ருசிக்கும்! பழகிப்பார் … உன் சுதந்திரம் புரியும்! உறவாடிப்பார் … உனக்கு சுகங்களைக் கொடுத்து போர்த்திவிடும்! வாயில் நீர்வடிந்து கசிகின்ற முழு தூக்கத்திலும் கூட, இரவின் பாதுகாப்பில் அசந்து அனைத்தும் மறந்திருப்பாய்.

எது நிர்வாணம் ?

ஆதி மனிதன் உடை என்று ஒன்றை அறிந்ததில்லை அடுத்து வந்த மனிதன் உணர்ந்தான் அதை மரக்கிளைகளையும் கொத்துக்களையும் கொண்டு மறைத்தான் உடலை. நாகரிக மனிதன் பிறந்தான் (அ)னாகரியங்களை கண்டு பிடித்து மகிழ்ந்தான். அக்காலம் முதல் இக்காலம் வரை சேத்தை மிதித்து சோத்துக்கு வழி காட்டும் விவசாயிக்கு ஒரு முழக் கோவணம். உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்பது பழ மொழி. உடையைச் சுருக்கி பணத்தைச் சேர்க்க பெண்கள் கண்டது சினிமாவின் Read more

தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்

அல்லிமலர் போலிருக்கும் அழகானப் பெண்ணருகில் கொல்லிப்பலா கொஞ்சுகின்ற கவிஞரிவர் தமிழ்நெஞ்சம், அள்ளிக்கொண் டுசென்றிடவே ஆவலுடன் நிற்கின்றார், பள்ளியறைக் காத்திருக்க பலகனவுப் பூத்திருக்க. வெள்ளிநிலவு இங்குவந்து விளையாட்டில் தனைமறந்து பில்லியாட்ஸ் ஆடுகின்ற பேரழகை என்னென்பேன், துள்ளியாடும் பருவமதில் தோகைதனை விரிக்கின்ற நல்லழகுத் தேவதையை நானிங்குக் காண்கிறேனே!

எதைப் புணரத் தடவுகிறாய்?

என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை புணர தடவுகிறாய். மார்புகளும் புடைத்திருக்கவில்லை இடையும் மெருகேறியிருக்கவில்லை மாதவிலக்கும் வரும் வயதும் எனகில்லை உடல் தெரிய அரைகுறை ஆடை அணியவில்லை கண்ணால் கவர்ச்சி வலை வீசவில்லை ஆணினித்தை பழிக்கவில்லை பெண்ணியம் பேசவில்லை புரட்சி காரியும் நானில்லை அகங்காரமும் கொள்ளவில்லை ஆணவ செருக்கும் எனக்கில்லை திமிர் பேச்சும் பேசவில்லை சரிசமமும் கேட்கவில்லை பெண்ணுரிமை சட்டமும் பேசவில்லை பெண்ணிய கவிதைகளும் எழுதவில்லை அடக்குமுறை பற்றியும் உரையாற்றவில்லை Read more

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய் —-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து தூய்மையான புகழுடனே உலகம் போற்ற —-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச் சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய் —-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம் தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித் —-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே ! இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இனிக்கின்ற வாழ்வாக உயர்த்தும் மேலே இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இன்னலுக்கு வழிகாட்டித் தள்ளும் கீழே Read more

வானம் தொடுவோம்!

விதையாய் விழு மண்ணில் விருச்சயமாய் எழு விண்ணில் தடைகளை உடைத்தெறிந்து வா.. கற்பாறைகளுக்குள் முளைத்திருக்கும் சிறுசெடி போல முட்டிமோதி முளைத்து வா.. பூமியின் மேற்பரப்பில் விழுந்த விதைகள் அடிஆழத்தின் ஆணிவேராய் கண்களுக்கு புலப்படாமல் காத்திருக்கும் சிறுதுளி நீராக.. வீரத்தின் விதைநிலத்தில் வீழ்ந்த விதைகள் ஒருநாள் உயிர்ப்புடன் வளரும்.. மண்ணில் இருந்து விண்ணை நோக்கி எழுச்சியுடன் வளரும்.. காத்திருப்போம் ஒரு துளி நீர் போதும் விதைகள் மீண்டு எழ எழுவோம்…. அந்த Read more