கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம்
என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது!
என்னிதய ஓசைகளை காட்டிலும்
தறியின் ஓசைகளையே
நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்!

தறிகள் ஆடும் போதுதான் எனக்குள்
காதலும் நர்த்தனம் ஆடுகின்றன …

இலைகளை கோர்க்கும் போதுதான் எனக்குள்
வார்த்தைகள் கோர்வையைத் தேடுகின்றன …

நாடா அங்கும் இங்கும் ஓடும் போதுதான்
எனக்குள் வரிகள் தாண்டவம் ஆடுகின்றன …

சட சட சட வென என் தறிகள்ஓடும் போதுதான்
எனக்குள் கவிகளும் வடிவம் பெறுகின்றன…

இதய ஓசை நின்று விட்டால்
எனக்குள் உயிரின் ஓசை இல்லை!
தறியின் ஓசை நின்று விட்டால்
எனக்குள் கவிதை ஆசையும் இல்லை!

பெரும்பாலானவர்களை கவிஞனாக்கியது
காதல் என்றால் …
என்னை கவிஞனாக்கியது
எந்தன் தறிகள் தான்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த தெய்வம் என்னையும்
கவிஞனாக்கியது!

ஒவ்வொரு இரவிலும், தறிகளின் அடியிலே
என் தாயின் மடிகளாய் நினைத்து
நான் உறங்கி போகிறேன்!


4 Comments

குமார் முருகேசன் · அக்டோபர் 11, 2016 at 11 h 41 min

எந்தன் கவிதை புதிய வடிவம் பெற்றிருக்கிறது…
மகிழ்ச்சி

??? · அக்டோபர் 11, 2016 at 11 h 56 min

Superb ma

ஆலமரம் · அக்டோபர் 11, 2016 at 11 h 57 min

செய்யும் தொழிலே கவிதையானது கண்டு அதிசயிக்கிறேன்.

குமார் முருகேசன் · அக்டோபர் 16, 2016 at 8 h 38 min

நன்றிகள் தோழமைகளே…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...